Wednesday, April 21, 2010

பயிற்சியை முடித்து 41 தமிழ்ப் பொலிஸார் வெளியேற்றம்..

ஆறு மாத கால பயிற்சியை நிறைவு செய்த தமிழ்ப் பேசும் 41 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று காலை உத்தியோக பூர்வமாக வெளியேறினர்.
மட்டக்களப்பு பொலிஸ் பயிற்சிக் கல்லூயில் பயிற்சியை நிறைவு செய்த பொலிஸ் வீரர்களுக்கான அணி வகுப்பு மரியாதை கல்லடி பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்றது.
இப்பயிற்சிக் கல்லூரியிலிருந்து வெளியேறும் ஆறாவது தமிழ்ப் பேசும் பொலிஸ் பிரிவினர் இவர்களாவர்.
இது தொடர்பான வைபவத்தில் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிப் பணிப்பாளர் அஜித் பண்டார பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். கல்லடி பயிற்சிக் கல்லூரி பணிப்பாளர் எஸ். செல்வராசா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
திறமையாகச் செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களூக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment