Wednesday, March 30, 2011

கடைசி பந்தில் விக்கெட் வீழ்த்தி தனது சொந்த மண் ணில் விடை பெற்றார் இலங்கை நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன்.

இந்த உலகக் கிண்ண போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முத்தையா முரளிதரன் நேற்று அரையிறுதியில் தனது சொந்த மண்ணில் விளையாடி னார். ஆர் பிரேமதாச மைதானத்தில் நேற்று நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் முரளி தனது 10 ஓவர்களுக்கும் 42 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் அவர் தனது சொந்த மண்ணில் வீசிய கடைசி பந்தில் ஸ்கொட் ஸ்னரிஸை எல்.பி.டபிள்யூ. முறை யில் வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது. இதேபோன்று முரளி டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தனது கடைசி பந்துக்கு விக்கெட் வீழ்த்தியமை குறிப்பிட்டத்தக்கது. இதன்படி முரளி தனது சொந்த மண்ணில் 109 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 154 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனினும் அவர் சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியோர் வரிசையில் 4 ஆவது இடத்தையே பிடித்தார். இந்த சாதனை பட்டியலில் தென்னாரிபிக்க முன்னாள் வீரர் ஷோன் பொலக் 193 விக்கெட்டுகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார். அடுத்து வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் முரளி விளையாடவுள்ளார். இதுவே அவர் கிரிக்கெட் வாழ்க்கையில் விளையாடும் கடைசி ஆட்டமாகவும் அமையவுள்ளது.

Monday, March 28, 2011

1934 வீட்டுரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை.320 பாடசாலை அதிபர்களையும் நீதிமன்றில் நிறுத்த சுகாதார அமைச்சு முடிவு

நுளம்புகள் பெருகக்கூடிய வகையில் மிகமோசமான வீட்டுத் சூழலைக் கொண்டிருந்த 1934 வீட்டு உரிமை யாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது. தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தின் நிமித்தம் நேற்று முன்தினம் நாடெங்கிலும் 2 இலட்சத்து 7 ஆயிரத்து 824 வீடுகள் சோதிக்கப்பட்டன. இவற்றில் 35 ஆயிரத்து 638 வீடுகளில் நுளம்பு பெருகக் கூடிய இடங்கள் காணப் பட்டதுடன், 3001 வீடுகளில் நுளம்புகளின் குடம்பிகளும் கண்டறியப்பட்டதாகவும் சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் நேற்று கூறினார். இதேவேளை, அதிக நுளம்பு பெருக்கத் துடனான சூழலைக் கொண்டிருந்த 320 பாடசாலை அதிபர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகை யில், சுகாதார அமைச்சு கடந்த புதனன்று முதல் தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தை செயற்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் கடந்த வெள்ளியன்று நாடெங்கிலும் 6012 பாடசாலைகள் சோதிக்கப்பட்டன. இவற்றில் 2538 பாடசாலைகளில் நுளம்பு பெருகக்கூடிய சூழல் காணப்பட்டதுடன், 638 பாடசாலைகளில் நுளம்புக் குடம்பிகளும் கண்டறியப்பட்டிருக்கின்றன. இருந்த போதிலும் 320 பாடசாலைகளில் அதிகளவு நுளம்புகள் காணப்பட்டதுடன், நுளம்புகள் பெருகக் கூடிய இடங்களும் நிறையவே இருந்தன. இந்த பாடசாலை களில் கல்வி பயிலும் மாணவர்கள் பலர் ஏற்கனவே டெங்கு நோய்க்கும் உள் ளாகியுள்ளனர். இருந்தும் இப்பாடசாலை களின் அதிபர்கள் கல்வி அமைச்சினதோ, சுகாதார அமைச்சினதோ அறிவுறுத்தல்களை கருத்தில் எடுக்காது செயற்படுகின்றனர். அதன் விளைவாகவே இப்பாடசாலைகளில் நுளம்புகள் பெருகிக் காணப்படுகின்றன அதன் காரணத்தினால்தான் இப்பாடசாலை களின் அதிபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வாழக்குத் தாக்கல் செய்ய தீர்மானிக்கப் பட்டிருக்கின்றது என்றும் அவ்வதிகாரி கூறினார்.

Friday, March 25, 2011

மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதி அரசர்….


மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதி அரசர் எஸ். சிறிஸ்கந்தராஜா மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நேற்று (24,03,11) ஜனாதிபதி அவர்கள் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

Thursday, March 24, 2011

இன்று உலக சயரோக தினம்

இன்று உலக சயரோக (24,03,11) தினமாகும். இத் தினத்தையொட்டி நாடெங்கிலுமுள்ள சகல மாவட்டங்களிலும் சயரோக விழிப்புணர்வு நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு ஒழுங்கு செய்துள்ளது.
மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் வகையில் ஊர்வலங்களும், கருத்தரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டி ருக்கின்றன.
இலங்கையில் சயரோக நோய்க்கு உள்ளாவோரின் எண்ணிக்கை குறைந்த மாவட்டமான பொலன்னறுவை யில் தேசிய சயரோக தின நிகழ்ச்சிகள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெறவிருக்கின்றது.
இலங்கையில் வருடத்திற்கு 10 ஆயிரம் பேர் சயரோக நோயாளர்களாக இனம் காணப்படுகின்றனர். கடந்த வருடம் 10 ஆயிரத்து 95 பேர் சயரோக நோயாளர்களாக இனம் காணப்பட்டதுடன் இவர்களில் 2096 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Tuesday, March 22, 2011

சூரியன் பூமிக்கு மிக அருகில் சூரியக் கதிர்கள் நேரடியாகப் படிவதால் உஷ்ணமான காலநிலை.

சூரியன் பூமியை அண்மித்துள்ளதாலும்; சூரியக் கதிர்கள் நேரடியாகப் பூமிக்கு வந்து சேர்கின்றதHலும்; அதிக உஷ்ண காலநிலை ஏற்பட்டிருப்பததாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் சமிந்திர டி சில்வா தெரிவிக்கினறார்.
வானில் மேகத் திரள் குறைவடைந்துள்ளதால் சூரியக் கதிர்கள் நேரடியாகப் பூமிக்கு வந்து சேர்கின்றன. மேலும் காற்றின் வேகமும் வளிமண்டலத்திலுள்ள ஈரப்பதனும் குறைவடைந்துள்ளது.
நாட்டில் அதிக உஷ்ண காலநிலை ஏற்பட்டிருப்பதற்கு வெப்பநிலை அதிகரிப்பு காரணமல்ல என்று அவர் குறிப்பிட்டார்.
வியர்வை ஆவியாகும் வீதமும் பெரிதும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதன் காரணத்தினால் தான் தற்போதைய அசெளகரிய காலநிலை ஏற்பட்டிருக்கின்றது. மற்றப்படி வெப்பநிலை அதிகரிப்புக்கு தற்போதைய அதிக உஷ்ண காலநிலை காரணமல்ல.
இருப்பினும் ஏப்ரல் மாதத்தின் முற்பகுதியில் சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும் என்றார்.

Monday, March 21, 2011

இலங்கை பக்தர்களுக்கென இந்தியாவில் விசேட ரயில் சேவைகள் இந்திய உயர் ஸ்தானிகர் அறிவிப்பு!

‘புத்தகாயா’ ‘கபிலவஸ்து’ போன்ற இந்தியாவின் முக்கிய மதத் தலங்களுக்கு சென்னையிலிருந்து இலகுவாக பயணிப்ப தற்கான விசேட ரயில் சேவைகளை இவ்வருட இறுதிக்குள் ஆரம்பிப்பதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்த் தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து இந்திய புனித தலங்களுக்குச் செல்வோரின் நன்மை கருதி இத்தீர்மானத்தை இந்திய அரசு மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த அவர்; தலைமன்னார் இராமேஷ்வரம் கொழும்பு தூத்துக்குடி கப்பல் சேவைகளோடு இணைந்ததாக இந்த சென்னை ரயில் சேவை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்த ரயில் சேவை மூலம் இந்தியாவின் 14 புனித தலங்களுக்குச் சென்னையிலிருந்து சுலபமாகச் செல்வதற்கு வாய்ப்புக் கிட்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
இந்திய கலாசார நட்புறவுப் பேரவை ஏற்பாடு செய்திருந்த சர்வ தேச பெளத்த மாநாடு நேற்றைய தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கண்டி பல்லேகல சர்வதேச பெளத்த பல்கலைக்கழக மண்டபத்தி ஆரம்ப மானது.
இரு தினங்கள் நடைபெறவுள்ள இம்மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இந்திய உயர் ஸ்தானிகர் இவ்வாறு தெரிவித்தார்.

Wednesday, March 16, 2011

2011இல் 60,000 வீடுகள்.

இவ் வருடம் நாடுபூராகவும் 60,000 வீடுகளை அமைப்பதற்கான திட்டத்தினை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அமுல்படுத்தியுள்ளது.
வீடு கட்டுவதற்கு எதிர்பார்த்தவண்ணம் உள்ள குறைந்த, நடுத்தர மற்றும் உயர் வருமானம் பெறும் குடும்பங்களுக்கு “ஜன சேவா மில்லியன் வீடமைப்பு மற்றும் குடியேற்ற திட்டத்தின் கீழ் கடனுதவிகள் வழங்கப்படவுள்ளன. அரசாங்கம் இதற்கென 800 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
மேலும் இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியன 4500 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதுடன், 20,000 குடும்பங்களுக்கு இக் கடனுதவிகள் வழங்கப்படவுள்ளன

Monday, March 14, 2011

தேர்தல் பிரசாரப் பணிகள் இன்று நள்ளிரவுடன் முடிவு பாதுகாப்புக் கடமையில் 50,000 பொலிஸார்,25,000 படையினர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று (14) நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைவதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
பிரசாரக் கூட்டம், மக்கள் சந்திப்பு, உள்ளிட்ட அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் முடித்துக் கொள்ளப்பட வேண்டுமென்று அவர் கூறியுள்ளார். அதேவேளை நாளை (15) நள்ளிரவுக்கு முன்னர் வேட்பாளர்களின் காரியாலயங்களும், வீடுகளில் செய்யப்பட்டுள்ள தேர்தல் அலங்காரங்களும் நீக்கிக் கொள்ளப்பட வேண்டுமென்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையாளர் பொலிஸ் மாஅதிபர் மற்றும் கட்சி செயலாளர்களின் கலந்துரையாடலின் போது இது தொடர்பான இணக்கம் காணப்பட்டதாகவும் எனவே அவ்வாறான அலங்காரங்களை அப்புறப்படுத்தாத காரியாலயங்களில் உள்ள அலங்காரங்களை பொலிஸார் அப்புறப்படுத்துவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் இடம் பெறும், எதிர்வரும் 17ஆம் திகதி வியாழக்கிழமை விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அவர் குழப்பங்கள் அல்லது கலவரங்கள் ஏற்படும் பிரதேசத்தில் பொலிஸாருக்கு புறம்பாக இராணுவத்தினரும் பாதுகாப்புச் செயற்பாடுகளுக்காக வரவழைக்கப்படுவ ரென்றும் அவர் மேலும் கூறினார்.
இந்த வேளையில், தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தமது இறுதிக்கட்ட கூட்டங்களை நடத்திவருகின் றன.
அரச தரப்பு கட்சியினர் இதுவரை மேற்கொண்ட வேலைத்திட்டங்களையும் இனியும் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் கூறி வருகின்றனர்.
அதேநேரத்தில், எதிரணியினர் தாம் கிராம சபைகளை கைப்பற்றுவதன் மூலம் செய்யக்கூடிய பணிகளை தெரிவித்து மக்களிடம் வாக்குக் கேட்டுவருகின்றனர்
இலங்கை தமிழரசுக் கட்சியின் நெடுங்கேணி பிரதேச சபைக்குரிய இறுதி பிரசாரக் கூட்டம் கடந்த வெள்ளிமாலையும், வெங்கலசெட்டிகுளம் பிரதேச சபைக்குரிய கூட்டம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவும் நடைபெற்றன.ஐந்து தமிழ் கட்சிகளுடைய தலைவர்க ளான பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வீ. ஆனந்தசங்கரி, ரி. சித்தார்த்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நடைபெற்ற எந்த தரப்பு கூட்டங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்ளவில்லை. குறைந்தளவானவர்களே பங்குகொண்டனர்.
இதேவேளை பாதுகாப்புக்காக 75 ஆயிரம் பேரைக் கொண்ட விசேட படையணியொன்று ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல் பாதுகாப்பு தொடர்பான பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்துள்ளார். 50 ஆயிரம் பொலிஸார், 20 ஆயிரம் முப்படையினர் மற்றும் 5 ஆயிரம் விசேட அதிரடிப்படையினர் என 75 ஆயிரம் பேரைக் கொண்ட விசேட படையணி 235 உள்ளூராட்சி மன்றங்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கை களில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
அத்துடன் தேர்தல் தினமான எதிர்வரும் 17ஆம் திகதி கலகமடக்கும் படை, நடமாடும் காவல் சேவை, வீதி பாதுகாப்பு சேவை ஆகிய பல சேவைகள் இடம்பெறுவதுடன், தேர்தல் வாக்களிப்பு நிலையங்களின் பாதுகாப்புக்கென தனியான பிரிவும் சேவையில் ஈடுபடும்.
வாக்கு பெட்டிகளை எண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்ல தனியான பாதுகாப்பு செயற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை இதுவரை தேர்தல் சட்டங்களை மீறியதாக 142 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அவற்றுடன் தொடர்புடைய 129 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் 14 பேர் வேட்பாளர்கள் என்றும் தேர்தல் பாதுகாப்புக்கான விசேட பொலிஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.

Friday, March 11, 2011

ஜப்பானில் பாரிய சுனாமி: ஹவாய் மற்றும் பிலிப்பைன்ஸிலும் எச்சரிக்கை

ஜப்பானின் வடக்குப் பகுதியில் இன்று ஏற்பட்ட 8.8 ரிச்டர் அளவிலான நில நடுக்கத்தினை தொடர்ந்து அப்பகுதியை பாரிய சுனாமி தாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கு ஒனாமா நகரில் வாகனங்கள், வீடுகள் மட்டும் கட்டிடங்கள் சுனாமியால் அடித்துச் செல்லப்படும் காட்சியினை அந்நாட்டு தொலைக்காட்சி சேவையொன்று ஒளிபரப்பாக்கியுள்ளது.
இது குறித்த உத்தியோகபூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை
இதேவேளை ஹவாய் மற்றும் பிலிப்பைன்ஸில் உள்ள 19 மாகாணங்களிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Thursday, March 10, 2011

அரச பொறுப்பில் ஹில்டன் ஹோட்டல் அமைச்சர் பசில் தகவல்.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலை அரசாங்கம் முழுமையாகப் பொறுப்பேற்றுள்ளதாகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்தினால் நீடிப்பது தொடர்பான விவாதத்திலே அவர் இவ்வாறு கூறினார்.
ஐ.தே.க. எம்.பி. ஹர்ச த சில்வா தெரிவித்த குற்றச் சாட்டுகளுக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது:
இலங்கையில் பல நட்சத்திர ஹோட்டல்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் வெளிநாட்டு கம்பனிகளுக்கு சொந்தமானவையல்ல ஹில்டன் ஹோட்டலின் முழு உரிமையும் தற்பொழுது அரசாங்கத்துக்கு பெறப்பட்டுள்ளது. ஐ.தே.க.வே அதனை நாசம் செய்தது. ஹில்டன் ஹோட்டல் கடந்தவாரம் அரசிற்கு முழுமையாக பொறுப்பேற்கப்பட்டது.
காணியின் முழுத் தொகையையும் பெற்றே முதலீட்டாளர்களுக்கு காணி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
பெறுமதியை விட குறைவாக வழங்கியே ஐ.தே.க. ஆட்சியில் முதலீடுகளை பெற்றது. காணியின் பெறுமதிக்கே எமது அரசு வழங்கி வருகிறது.
சமாதானத்தை நிலைநாட்டி முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் முதலீட்டாளர்களின் பின்னால் செல்ல நேரிட்டது.
இன்று முதலீட்டாளர்கள் தேடி வருகின்றனர். 24 மணி நேரமும் மின்சாரம் நீர் வசதி முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

Wednesday, March 9, 2011

இலங்கை - கனடா நேரடி விமான சேவை வரலாற்றில் முதல் முறையாக ஏற்பாடு.

வரலாற்றில் முதல் முறையாக இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு ஐக்கிய இராச்சியம் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையில் அண் மையில் கைச்சாத்திடப்பட்ட விமான சேவைகள் ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்த வாய்ப்பு இலங்கை க்குக் கிடைத்துள்ளது.
இதன்கீழ் ஸ்ரீலங்கன் எயார் லைன் நிறுவனத்திற்கு வாரத்தில் 7 பயணங்களை கனடாவின் டொரொன்டோ விமான நிலையத்திற்கு மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.இந்த இணக்கப் பாட்டின் கீழ் ஸ்ரீலங்கன் எயார் லைன் நிறுவனத்திற்கு கொழும்பி லிருந்து லண்டன் ஊடாக கனடாவின் டொரொன் டோ வரையில் பயணிகளைக் கொண்டு செல்வதற்கும் கொண்டுவருவத ற்கும் அனுமதி கிடைத்துள்ளது.
இதன் மூலம் இலங்கைக்கும் கனடாவிற்கும் இடையில் பயணிக்கும் விமானப் பயணிகளுக்கும் பாரிய நன்மைகள் ஏற்படுவதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்ன தெரிவித்தார்.
அவ்வாறே புதிய ஒப்பந்தத்தின் பயனாக இதுவரையில் இலங்கைக்கும் லண்டனுக்கும் இடையில் நிலவிவந்த வாரத்தில் 13 பயணங்கள் எதிர்வரும் பனிக் காலம் முதல் வாராந்தம் 21 பயணங்களாக அதிகரிப்பதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ள தாகவும் அமைச்சர் மேலும் கூறினார்

Sunday, March 6, 2011

லிபியாவிலிருந்து இதுவரை 600 இலங்கையர் நாடு திரும்பினர் தகவல்களைப் பெற விமான நிலையத்தில் 24 மணி நேர கருமபீடம்.

லிபியாவிலிருந்து இதுவரை 600 இலங்கையர்கள் நாடு திரும்பியிருப்பதாக இலங்கை வேலைவாயப்புப் பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.
விசேட விமானங்கள் மூலம் இவர்கள் பகுதி பகுதியாக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் நான்கு கட்டங்களாக 242 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், மேலும் 150 பேர் நேற்றைய தினம் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்.
லிபியாவிலுள்ள 1500 இலங்கையர்களை யும் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்துவர விசேட விமானங்களை அனுப்புமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் டிலான் பெரேராவுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார். இத்தகைய விசேட விமானங்கள் சில ஏற்கனவே அனுப்பப்பட்டிருப்பதுடன், இன்றைய தினமும் விமானமொன்று லிபியாவுக்கு அனுப்பப்படவுள்ளதென கிங்ஸ்லி ரணவக்க தினகரனுக்குத் தெரிவித்தார்.
லிபியாவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள் குறித்த தகவல்களை வழங்க கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகைப்பிரிவில், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட கருமபீடமொன்று 24 மணித்தியாலங்கள் இயங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், லிபியாவில் உயிரிழந்த இலங்கையர் கலவரத்தின் காரணமாக இறக்கவில்லையென்றும், வேலைத்தளத்தில் ஏற்பட்ட விபத்தினாலேயே அவர் உயிரிழந்திருப்பதாகவும் கிங்ஸ்லி ரணவக்க மேலும் தெரிவித்தார்.

Saturday, March 5, 2011

45 இலங்கை மீனவர்கள் இன்று நாடு திரும்புகின்றனர்.

இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 45 இலங்கை மீனவர்கள் இன்று நாடு திரும்ப உள்ளதாக மீன்பிடித் திணைக்கள உதவிப் பணிப்பாளர் லால் த சில்வா கூறினார். இவர்களுடன் 8 படகுகளும் இந்திய பாதுகாப்புப் படையினரால் மீள வழங்கப்பட்டுள்ளன. இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினரின் வழித்துணையுடன் வரும் இலங்கை மீனவர்களை காங்கேசன்துறை கடலில் வைத்து படையினர் பொறுப்பேற்க உள்ளனர்.
இந்திய கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்ததாக இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் நேற்று நாடு திரும்ப ஏற்பாடாகியிருந்த போதும் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டதாக கடற்படை கூறியது. இந்தியாவில் மேலும் 19 மீனவர்கள் 7 படகுகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு இவர்களில் 13 பேர் 6 படகுகளுடன் விடுவிக்கப்பட்டுள் ளதாக லால் த சில்வா கூறினார். இவர்கள் அடுத்த வாரம் நாடு திரும்ப உள்ளனர்.

Thursday, March 3, 2011

விவசாய உற்பத்தியில் யாழ். மக்கள் நாட்டுக்கு முன்னுதாரணம்..

விவசாய உற்பத்திகளில் நாட்டின் ஏனைய பகுதி மக்களுக்கு யாழ்ப் பாண மக்கள் முன்னு தாரணமாகத் திகழ்வதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ புகழாரம் சூடினார்.
நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ‘திவி நெகும’ குடும்ப பொருளாதார அபிவிருத்தித் திட்டம் தொடர்பான விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு யாழ். விவசாயிகளைப் பாராட்டினார்.
30 வருடங்களாக விவசாயம் செய்ய முடியாதிருந்த நிலங்களில் தற்போது அதற்கான வாய்ப்பு கிடைத்ததும் அம்மக்கள் அதனைச் சரியாக பயன்படுத் திக்கொண்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், நாட்டின் ஏனைய பகுதி மக்களும் இதுபோன்று உற்பத்தித்துறை யில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தாம் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததாகக் குறிப்பிட்ட அமைச்சர்;
புதிதாக பயிர்ச்செய்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலங்களைப் பார்வையிடுவதற்காக பலாலியில் இருந்து வீதிவழியாக பயணித்ததாகத் தெரிவித்தார்.
இதன்போது அங்கு ஆயிரக்கணக்கான கிலோ பீற்றூட் மரக்கறி வகைகளுடன் புகையிலை அறுவடையும் நேரில் காணக்கிடைத்ததாகவும், அதனைக் கண்டு தாம் மகிழ்வுற்றதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Tuesday, March 1, 2011

புனர்வாழ்வு பெற்ற மேலும் 300 முன்னாள் புலி உறுப்பினர்களில் சமூகத்துடன் இணைப்பு.

இறுதிக்கட்ட மனிதாபிமான நடவடிக்கையின் போது படையினரிடம் சரணடைந்த மற்றும் கைதான முன்னாள் புலி உறுப்பினர்கள், இலங்கை அரசாங்கத்தால் புனர்வாழ்வு முகாங்களில் புனர்வாழ் அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்படும் நிகழ்வு, கட்டம்கட்டமாக இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் வவுனியா புனர்வாழ்வு முகாங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டு, தொழிற்பயிற்சி மற்றும் மனவள பயிற்சிகள் வழங்கப்பட்ட முன்னால் விடுதலைப்புலி உறுப்பினர்களில் 300 பேர் இன்று(01.03.11) சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளனர்.
இந் நிகழ்வு வவுனியா கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளதுடன் வட மாகாண ஆளுநர், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மற்றும் வவுனியா அரச அதிபர் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதுவரை முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களில் 6000பேர் வரை புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.