Thursday, March 24, 2011

இன்று உலக சயரோக தினம்

இன்று உலக சயரோக (24,03,11) தினமாகும். இத் தினத்தையொட்டி நாடெங்கிலுமுள்ள சகல மாவட்டங்களிலும் சயரோக விழிப்புணர்வு நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு ஒழுங்கு செய்துள்ளது.
மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் வகையில் ஊர்வலங்களும், கருத்தரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டி ருக்கின்றன.
இலங்கையில் சயரோக நோய்க்கு உள்ளாவோரின் எண்ணிக்கை குறைந்த மாவட்டமான பொலன்னறுவை யில் தேசிய சயரோக தின நிகழ்ச்சிகள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெறவிருக்கின்றது.
இலங்கையில் வருடத்திற்கு 10 ஆயிரம் பேர் சயரோக நோயாளர்களாக இனம் காணப்படுகின்றனர். கடந்த வருடம் 10 ஆயிரத்து 95 பேர் சயரோக நோயாளர்களாக இனம் காணப்பட்டதுடன் இவர்களில் 2096 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment