Monday, March 28, 2011

1934 வீட்டுரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை.320 பாடசாலை அதிபர்களையும் நீதிமன்றில் நிறுத்த சுகாதார அமைச்சு முடிவு

நுளம்புகள் பெருகக்கூடிய வகையில் மிகமோசமான வீட்டுத் சூழலைக் கொண்டிருந்த 1934 வீட்டு உரிமை யாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது. தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தின் நிமித்தம் நேற்று முன்தினம் நாடெங்கிலும் 2 இலட்சத்து 7 ஆயிரத்து 824 வீடுகள் சோதிக்கப்பட்டன. இவற்றில் 35 ஆயிரத்து 638 வீடுகளில் நுளம்பு பெருகக் கூடிய இடங்கள் காணப் பட்டதுடன், 3001 வீடுகளில் நுளம்புகளின் குடம்பிகளும் கண்டறியப்பட்டதாகவும் சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் நேற்று கூறினார். இதேவேளை, அதிக நுளம்பு பெருக்கத் துடனான சூழலைக் கொண்டிருந்த 320 பாடசாலை அதிபர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகை யில், சுகாதார அமைச்சு கடந்த புதனன்று முதல் தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தை செயற்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் கடந்த வெள்ளியன்று நாடெங்கிலும் 6012 பாடசாலைகள் சோதிக்கப்பட்டன. இவற்றில் 2538 பாடசாலைகளில் நுளம்பு பெருகக்கூடிய சூழல் காணப்பட்டதுடன், 638 பாடசாலைகளில் நுளம்புக் குடம்பிகளும் கண்டறியப்பட்டிருக்கின்றன. இருந்த போதிலும் 320 பாடசாலைகளில் அதிகளவு நுளம்புகள் காணப்பட்டதுடன், நுளம்புகள் பெருகக் கூடிய இடங்களும் நிறையவே இருந்தன. இந்த பாடசாலை களில் கல்வி பயிலும் மாணவர்கள் பலர் ஏற்கனவே டெங்கு நோய்க்கும் உள் ளாகியுள்ளனர். இருந்தும் இப்பாடசாலை களின் அதிபர்கள் கல்வி அமைச்சினதோ, சுகாதார அமைச்சினதோ அறிவுறுத்தல்களை கருத்தில் எடுக்காது செயற்படுகின்றனர். அதன் விளைவாகவே இப்பாடசாலைகளில் நுளம்புகள் பெருகிக் காணப்படுகின்றன அதன் காரணத்தினால்தான் இப்பாடசாலை களின் அதிபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வாழக்குத் தாக்கல் செய்ய தீர்மானிக்கப் பட்டிருக்கின்றது என்றும் அவ்வதிகாரி கூறினார்.

No comments:

Post a Comment