‘புத்தகாயா’ ‘கபிலவஸ்து’ போன்ற இந்தியாவின் முக்கிய மதத் தலங்களுக்கு சென்னையிலிருந்து இலகுவாக பயணிப்ப தற்கான விசேட ரயில் சேவைகளை இவ்வருட இறுதிக்குள் ஆரம்பிப்பதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்த் தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து இந்திய புனித தலங்களுக்குச் செல்வோரின் நன்மை கருதி இத்தீர்மானத்தை இந்திய அரசு மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த அவர்; தலைமன்னார் இராமேஷ்வரம் கொழும்பு தூத்துக்குடி கப்பல் சேவைகளோடு இணைந்ததாக இந்த சென்னை ரயில் சேவை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்த ரயில் சேவை மூலம் இந்தியாவின் 14 புனித தலங்களுக்குச் சென்னையிலிருந்து சுலபமாகச் செல்வதற்கு வாய்ப்புக் கிட்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
இந்திய கலாசார நட்புறவுப் பேரவை ஏற்பாடு செய்திருந்த சர்வ தேச பெளத்த மாநாடு நேற்றைய தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கண்டி பல்லேகல சர்வதேச பெளத்த பல்கலைக்கழக மண்டபத்தி ஆரம்ப மானது.
இரு தினங்கள் நடைபெறவுள்ள இம்மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இந்திய உயர் ஸ்தானிகர் இவ்வாறு தெரிவித்தார்.
No comments:
Post a Comment