Tuesday, March 1, 2011

புனர்வாழ்வு பெற்ற மேலும் 300 முன்னாள் புலி உறுப்பினர்களில் சமூகத்துடன் இணைப்பு.

இறுதிக்கட்ட மனிதாபிமான நடவடிக்கையின் போது படையினரிடம் சரணடைந்த மற்றும் கைதான முன்னாள் புலி உறுப்பினர்கள், இலங்கை அரசாங்கத்தால் புனர்வாழ்வு முகாங்களில் புனர்வாழ் அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்படும் நிகழ்வு, கட்டம்கட்டமாக இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் வவுனியா புனர்வாழ்வு முகாங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டு, தொழிற்பயிற்சி மற்றும் மனவள பயிற்சிகள் வழங்கப்பட்ட முன்னால் விடுதலைப்புலி உறுப்பினர்களில் 300 பேர் இன்று(01.03.11) சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளனர்.
இந் நிகழ்வு வவுனியா கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளதுடன் வட மாகாண ஆளுநர், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மற்றும் வவுனியா அரச அதிபர் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதுவரை முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களில் 6000பேர் வரை புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment