Tuesday, March 22, 2011

சூரியன் பூமிக்கு மிக அருகில் சூரியக் கதிர்கள் நேரடியாகப் படிவதால் உஷ்ணமான காலநிலை.

சூரியன் பூமியை அண்மித்துள்ளதாலும்; சூரியக் கதிர்கள் நேரடியாகப் பூமிக்கு வந்து சேர்கின்றதHலும்; அதிக உஷ்ண காலநிலை ஏற்பட்டிருப்பததாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் சமிந்திர டி சில்வா தெரிவிக்கினறார்.
வானில் மேகத் திரள் குறைவடைந்துள்ளதால் சூரியக் கதிர்கள் நேரடியாகப் பூமிக்கு வந்து சேர்கின்றன. மேலும் காற்றின் வேகமும் வளிமண்டலத்திலுள்ள ஈரப்பதனும் குறைவடைந்துள்ளது.
நாட்டில் அதிக உஷ்ண காலநிலை ஏற்பட்டிருப்பதற்கு வெப்பநிலை அதிகரிப்பு காரணமல்ல என்று அவர் குறிப்பிட்டார்.
வியர்வை ஆவியாகும் வீதமும் பெரிதும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதன் காரணத்தினால் தான் தற்போதைய அசெளகரிய காலநிலை ஏற்பட்டிருக்கின்றது. மற்றப்படி வெப்பநிலை அதிகரிப்புக்கு தற்போதைய அதிக உஷ்ண காலநிலை காரணமல்ல.
இருப்பினும் ஏப்ரல் மாதத்தின் முற்பகுதியில் சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும் என்றார்.

No comments:

Post a Comment