Wednesday, March 16, 2011

2011இல் 60,000 வீடுகள்.

இவ் வருடம் நாடுபூராகவும் 60,000 வீடுகளை அமைப்பதற்கான திட்டத்தினை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அமுல்படுத்தியுள்ளது.
வீடு கட்டுவதற்கு எதிர்பார்த்தவண்ணம் உள்ள குறைந்த, நடுத்தர மற்றும் உயர் வருமானம் பெறும் குடும்பங்களுக்கு “ஜன சேவா மில்லியன் வீடமைப்பு மற்றும் குடியேற்ற திட்டத்தின் கீழ் கடனுதவிகள் வழங்கப்படவுள்ளன. அரசாங்கம் இதற்கென 800 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
மேலும் இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியன 4500 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதுடன், 20,000 குடும்பங்களுக்கு இக் கடனுதவிகள் வழங்கப்படவுள்ளன

No comments:

Post a Comment