இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 45 இலங்கை மீனவர்கள் இன்று நாடு திரும்ப உள்ளதாக மீன்பிடித் திணைக்கள உதவிப் பணிப்பாளர் லால் த சில்வா கூறினார். இவர்களுடன் 8 படகுகளும் இந்திய பாதுகாப்புப் படையினரால் மீள வழங்கப்பட்டுள்ளன. இந்திய கரையோரப் பாதுகாப்புப் படையினரின் வழித்துணையுடன் வரும் இலங்கை மீனவர்களை காங்கேசன்துறை கடலில் வைத்து படையினர் பொறுப்பேற்க உள்ளனர்.
இந்திய கடல் எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்ததாக இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் நேற்று நாடு திரும்ப ஏற்பாடாகியிருந்த போதும் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டதாக கடற்படை கூறியது. இந்தியாவில் மேலும் 19 மீனவர்கள் 7 படகுகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு இவர்களில் 13 பேர் 6 படகுகளுடன் விடுவிக்கப்பட்டுள் ளதாக லால் த சில்வா கூறினார். இவர்கள் அடுத்த வாரம் நாடு திரும்ப உள்ளனர்.
No comments:
Post a Comment