Thursday, March 3, 2011

விவசாய உற்பத்தியில் யாழ். மக்கள் நாட்டுக்கு முன்னுதாரணம்..

விவசாய உற்பத்திகளில் நாட்டின் ஏனைய பகுதி மக்களுக்கு யாழ்ப் பாண மக்கள் முன்னு தாரணமாகத் திகழ்வதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ புகழாரம் சூடினார்.
நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ‘திவி நெகும’ குடும்ப பொருளாதார அபிவிருத்தித் திட்டம் தொடர்பான விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு யாழ். விவசாயிகளைப் பாராட்டினார்.
30 வருடங்களாக விவசாயம் செய்ய முடியாதிருந்த நிலங்களில் தற்போது அதற்கான வாய்ப்பு கிடைத்ததும் அம்மக்கள் அதனைச் சரியாக பயன்படுத் திக்கொண்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், நாட்டின் ஏனைய பகுதி மக்களும் இதுபோன்று உற்பத்தித்துறை யில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தாம் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததாகக் குறிப்பிட்ட அமைச்சர்;
புதிதாக பயிர்ச்செய்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலங்களைப் பார்வையிடுவதற்காக பலாலியில் இருந்து வீதிவழியாக பயணித்ததாகத் தெரிவித்தார்.
இதன்போது அங்கு ஆயிரக்கணக்கான கிலோ பீற்றூட் மரக்கறி வகைகளுடன் புகையிலை அறுவடையும் நேரில் காணக்கிடைத்ததாகவும், அதனைக் கண்டு தாம் மகிழ்வுற்றதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment