Thursday, March 10, 2011

அரச பொறுப்பில் ஹில்டன் ஹோட்டல் அமைச்சர் பசில் தகவல்.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலை அரசாங்கம் முழுமையாகப் பொறுப்பேற்றுள்ளதாகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்தினால் நீடிப்பது தொடர்பான விவாதத்திலே அவர் இவ்வாறு கூறினார்.
ஐ.தே.க. எம்.பி. ஹர்ச த சில்வா தெரிவித்த குற்றச் சாட்டுகளுக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது:
இலங்கையில் பல நட்சத்திர ஹோட்டல்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் வெளிநாட்டு கம்பனிகளுக்கு சொந்தமானவையல்ல ஹில்டன் ஹோட்டலின் முழு உரிமையும் தற்பொழுது அரசாங்கத்துக்கு பெறப்பட்டுள்ளது. ஐ.தே.க.வே அதனை நாசம் செய்தது. ஹில்டன் ஹோட்டல் கடந்தவாரம் அரசிற்கு முழுமையாக பொறுப்பேற்கப்பட்டது.
காணியின் முழுத் தொகையையும் பெற்றே முதலீட்டாளர்களுக்கு காணி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
பெறுமதியை விட குறைவாக வழங்கியே ஐ.தே.க. ஆட்சியில் முதலீடுகளை பெற்றது. காணியின் பெறுமதிக்கே எமது அரசு வழங்கி வருகிறது.
சமாதானத்தை நிலைநாட்டி முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் முதலீட்டாளர்களின் பின்னால் செல்ல நேரிட்டது.
இன்று முதலீட்டாளர்கள் தேடி வருகின்றனர். 24 மணி நேரமும் மின்சாரம் நீர் வசதி முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment