Monday, February 28, 2011

இராமேஸ்வரம் -மன்னார் கப்பல் சேவை விரைவில் தூத்துக்குடி- கொழும்பு சேவை இன்று ஆரம்பம்.

கொழும்பு துறைமுகத்திற்கும் தென் இந்தியாவின் தூத்துக்குடி துறைமுகத்திற்கும் இடையிலான முதலாவது பயணிகள் கப்பல் சேவை இன்று திங்கட்கிழமை தூத்துக்குடியில் இருந்து ஆரம்பமாகின்றது.
500 பயணிகளை அவர்களின் பொதிகளுடன் மிகவும் சிறந்த முறையில் ஏற்றிச் செல்லக் கூடிய வசதிகளைக் கொண்ட இந்த கப்பலை இந்தியாவில் தனியார் நிறுவனம் ஒன்று நிர்வகித்து வருகின்றது.
தூத்துக்குடி துறைமுகத்திலுள்ள பாரிய களஞ்சிய சாலையொன்றை பயணிகளின் தங்குமிடமாக மாற்றியமைத்துள்ளார்கள். இங்கு பொதிகளை சோதனையிடல்- சுங்க பரிசோதனைகள்- குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கரும பீடங்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இப்போதைக்கு கொழும்புக்கும் தூத்துக்குடிக்குமிடையில் நடைபெறும் கப்பல் சேவை விரைவில் இராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் 2 வது கப்பல் சேவையாக விஸ்தரிக்கப்படும்.
பல்லாண்டு காலமாக இராமேஸ்வரத்துக்கும் தலை மன்னாருக்கும் இடையில் நடைபெற்று வந்த பயணிகள் கப்பல் சேவை 80 ஆம் ஆண்டு தசாப்தத்தின் ஆரம்பத்தில் பயணிகள் அச்சுறுத்தல் காரணமாக கைவிடப்பட்டது.
கொழும்பு துறைமுகத்திற்கும் தூத்துக்குடிக்கும் இடையிலான இடைவெளி 282 கிலோ மீற்றர் ஆகும். இது 152 கடல் மைல்களாகும். கொழும்பிலிருந்து தூத்துக்குடி செல்ல 10 முதல் 12 மணித்தியாலங்கள் எடுக்கும். ஆரம்ப கட்டத்தில் இரு தேசங்களுக்கும் இடையில் வாரத்திற்கு 2 கப்பல் சேவைகள் இடம்பெறும். பின்னர் வாரத்திற்கு 3 ஆக அதிகரிக்கப்படும்
இலங்கை கப்பல் போக்குவரத்து கூட்டுத்தாபனம் 500 முதல் 600 வரையிலான பயணிகளையும் பயணிகள் ஒவ்வொருவரின் 100 கிலோகிராம் பொதிகளையும் உடன் எடுத்துச் செல்வதற்கான வசதிகளையும் கொண்ட கப்பல்களை வாங்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
பயணிகள் போக்குவரத்திற்கான கப்பல் கட்டணங்கள் விமான கட்டணங்களை விட கணிசமான அளவு குறைவாகயிருப்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, February 26, 2011

வடக்கை அபிவிருத்தி செய்வதில் அரசு அர்ப்பணிப்புடன் செயற்பாடு ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் பாராட்டு.

மோதல்கள் இடம்பெற்ற வடபகுதியில் உட்கட்டமைப்புக்களை அபிவிருத்தி செய்வதில் இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் தெற்காசியாவுக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.
ஐந்து நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு நேற்றைய தினம் கொழும்பு சினமன்ட் கிரான்ட் ஹோட்டலில் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தியிருந்தது. முன்னாள் மோதல் பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளைக் கண்டறிந்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களையும் நேரடியாகச் சந்தித்து அவர்களின் நிலைப்பாடுகளைக் கேட்டறிந்துகொண்டதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் தலைவர் ஜீன் லம்பெர்ட் கூறினார்.
வடபகுதியில் பாடசாலைகள், வீதிகள், நீர்விநியோகம், மின்விநியோகம், உள்ளிட்ட உட்கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமது இலங்கை விஜயத்தின்போது இலங்கை சபாநாயகர், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், வடபகுதி அரசாங்க அதிபர்கள் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந் ததாகவும் அவர் தெரிவித்தார். வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் அபிவிருத்திப் பணிகளின் எதிர்காலத் திட்டங்களை உரிய தரப்பினரிடம் கேட்டறிந்து கொண்டதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டிருக்கும் அபிவிருத்திப் பணிகளைப் பார்வையிட்டதாகவும் அவர் கூறினார்.
அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், அரசாங்கத்திற்கும் இடையில் ஆரம்பித்திருக்கும் பேச்சுவார்த்தைகளைத் தாம் வரவேற்பதாகவும், இப்பேச்சுவார்த்தைகள் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வொன்று எட்டப்படவேண்டுமென்றும் ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் தலைவர் ஜீன் லம்பெர்ட் மேலும் கூறினார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவரும் கலந்துகொண்டிருந்தார்.

Friday, February 25, 2011

மீனவர் பிரச்சினைக்கு இணக்கப்பாட்டுடன் நிரந்தர தீர்வு.

கடற்றொழில் தொடர்பான பிரச்சினைக்கு இரு நாடுகளுக்குமிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கூறினார். இது தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையில் கூட்டுக்குழுவொன்றை அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் நேற்று உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,மீனவர் தொடர்பான பிரச்சினையின் போது இரு நாட்டுக்குமிடையிலான நல்லுறவின் அடிப்படையில் கெளரவமாகவே நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இந்திய மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பூரண விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. இதற்கான முழு அதிகாரம் கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற கடல் எல்லை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு எமது கடற்படை படகுகள் எதுவும் செல்லவில்லை.
இந்திய மீன்பிடிப்படகுகளை சந்திக்க நேரிட்டால் எமது கடற்படையினர் மனிதாபிமானமாகவே செயற்பட்டு வந்துள்ளனர்.
யுத்தம் மற்றும் பாதுகாப்புப் பிரச்சினை காரணமாக வடக்கு கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது அந்த நிலை மாறியுள்ளது. வடபகுதி மக்கள் தமது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப ஆரம்பித் துள்ளனர்.
மீன்பிடி பிரச்சினை தொடர்பில் நாம் இந்திய வெளியுறவுச் செயலாளருடன் பேச்சு நடத்தி வருகிறோம். மனிதாபிமான ரீதியில் இதற்கு தீர்வு காண முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.
கடல் எல்லையை தாண்டிச் சென்று மீன்பிடிப்பது தொடர்பில் நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும். இதற்கு தற்காலிக தீர்வு காண்பது நல்லதல்ல. பல தடவைகள் இரு நாடுகளும் பேச்சு நடத்தியுள்ளன.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணக்கூடிய தெளிவான அரச இயந்திரம் உள்ளது. இதனூடாக இரு நாடுகளும் இணைந்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண உள்ளோம்.

Thursday, February 24, 2011

ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாதிகள் பட்டியலில் மீண்டும் புலிகள் உள்ளடக்கம்.

ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டிருக்கும் பயங்கரவாதிகளின் பட்டியலில் புலிகள் இயக்கத்தின் பெயர் மீண்டும் உள்ளடக்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் திகதி உருவாக்கிய பயங்கரவாத அமைப்புக்களைத் தடைசெய்யும் சட்டத்திற்கமைய புலிகள் இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடைசெய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் புலிகள் இயக்கமும் உள்ளடக்கப் பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட 26 அமைப்புக்களின் பட்டியலில் புலிகள் இயக்கமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் தாம் தடைசெய்யப்பட்டமைக்கான காரணங்களைக் கோர முடியுமென்று 2010 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்த போதும் எந்தவொரு அமைப்பும் அதற்கான கோரிக்கையை விடுக்க வில்லையென்றும் ஐரோப்பிய ஒன்றியத் தின் சஞ்சிகையில் மேலும் குறிப்பி ட்டுள்ளது.

Wednesday, February 23, 2011

இரட்டைப் பிரஜாவுரிமை இடைநிறுத்தம் ஜனாதிபதி விளக்கம்.

இரு நாடுகளைப் பிரதிநிதித்துவம் படுத்தும் வகையிலான இரட்டைப் பிரஜா வுரிமை வழங்கும் நடைமுறை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பத்திரிகை ஆசிரியர்கள் வானொலி தொலைக்காட்சி பொறுப்பதிகாரிகளை நேற்று அலரி மாளிகையில் சந்தித்த போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த சலுகையைப் பயன்படுத்தி சிலர் இலங்கைக்கு துரோகம் இழைக்கும் சதிகளில் ஈடுபட லாம் என்ற சந்தே கம் எழுந்திருப்பத னால் இவ்வாறான பிரஜாவுரிமை கோரி விண்ணப்பி ப்பவர்கள் பற்றி நன்கு விசாரணை செய்த பின்னரே அவர்க ளின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும்.
இது பற்றி ஒரு தீர்க்க மான முடிவை எடுப்பதற்காக அமைச்சர்கள் மட்டத்திலான குழுவொன்று இப்போது நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் அறிக்கையை பரிசீலனை செய்த பின்னரே இரட்டைப் பிரஜாவுரிமையை வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் மீண்டும் ஆரம்பிக்கும் என்று ஜனாதிபதி கூறினார்.

Monday, February 21, 2011

60 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஒத்திவைப்பு தேர்தல் ஆணையாளர்.

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு ஆட்சேபனை தெரிவித்து நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்படிருப்பதால் அறுபது (60) உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை ஒத்தி வைப்பதற்குத் தேர்தல் ஆணையாளர் தீர்மானித்துள்ளார்.
இதற்கேற்ப எதிர்வரும் மார்ச் மாதம் 17ம் திகதி 241 உள்ளூராட்சி மன்றங்களு க்குத் தேர்தல் நடாத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த 60 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் எதிர்வரும் 17ம் திகதி தேர்தலை நடாத்துவதற்கான நடவடிக் கைகளை இடைநிறுத்துமாறும் தேர்தல் ஆணையாளர் மாவட்ட மட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்களுககு ஆலோசனை வழங்கியுள்ளார் என்று பிரதி தேர்தல் ஆணையாளர் மஹிந்த பாலசூரிய கூறியுள்ளார்.
இந்த 60 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் நீதிமன்ற விசாரணைகள் நிறைவுற்று தீர்ப்பு வெளியான பின்னரே தேர்தலை நடாத்துவதற்கு திகதி நிர்ணயிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இவ் உள்ளூராட்சி மன்றங்களில் தபால் மூல வாக்களிப்பு க்கான வாக்களிப்பு பத்திரங்களை வழங்குவது, வாக்காளர் அட்டை விநியோகம் உட்பட தேர்தலோடு தொடர்புடைய சகல நடவடிக்கைகளும் இடைநிறுத்த ப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டில் 336 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன. அவற்றில் 301 உள்ளூ ராட்சி மன்றங்களுக்கு மார்ச் 17ம் திகதி தேர் தலை நடா த்துவதற்கு ஏற்கனவே தேர்தல் ஆணையாளர் தீர்மானித்தருந்தார். இருப்பினும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு ஆட்சேபனை தெரிவித்து நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் 60 உள்ளூராட்சி மக்கறங்களுக்கு மார்ச் 17ம் திகதி தேர்தலை நடாத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால் 35 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலைப் பின்னர் நடாத்துவதற்கும் தேர்தல் ஆணையாளர் ஏற்கனவே தீர்மானித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக் காளர் அட்டைகள் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் விநியோகிக்கப்படும் என்று தேர்தல் ஆணையாளர் அலுவலகம் அறிவித்து ள்ளது.
எதிர்வரும் மார்ச் 14 ஆம் திகதி வரை அவற்றை விநியோகிக்க தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருப்ப தாகவும் தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வாக்காளர் அட்டைகள் விநியோகம் முடிவடையும் திகதி வரை அவற்றை பத்திரமாக வைத்திருப்பதற்கு தபால் நிலையங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Sunday, February 20, 2011

பிராபகரனின் தாயார் பார்வதி அம்மாள் காலமானார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் இன்று காலை இயற்கை எய்தியுள்ளார்.
இவர் பல மாதங்களாக யாழ். வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
கடந்த சில வாரங்களாக இவரது உடல் நிலைமை கவலைக்கிடமாக இருந்த நிலையில் இன்று காலை இவர் உயிரிழந்துள்ளார்.

Friday, February 18, 2011

மீள்குடியேற முன்வராதவர்களின் நிவாரணங்கள் நிறுத்தப்படும்வலி வடக்கில் பிரதேச செயலகம் அறிவிப்பு.

வலிகாமம் வடக்கில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற முன்வராதவர்களுக்கான நிவாரணப் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படும் என அந்தப் பகுதிக்கு பொறுப்பான பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.
இவ்வாறு மீள்குடியமர முன்வராத குடும்பங்கள் சாதாரண குடும்பங்களாகவே கணிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளது.
வலி வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து அகதி முகாம்களிலும் நலன்புரி நிலையங்களிலும், உறவினர் வீடுகளிலும், வாடகை வீடுகளிலும் வாழ்ந்து வரும் குடும்பங்களை வலி வடக்கில் கண்ணிவெடி அகற்றப்பட்ட இடங்களில் படிப்படியாகக் குடியமர்த்துவதில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
எனினும் மீள் குடியமர அனுமதிக்கப்பட்ட இடங்களில் குடியமர விருப்பமில்லாத சிலர், வாழ்ந்த இடங்களிலேயே தொடர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்தப்பட்ட பின்னர் அவர்களுக்காக வழங்கப்படும் நிவாரணப் பொருட்களை மட்டும் பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
தாம் வாழ்ந்த பகுதிகளில் இருந்தபடியே நிவாரணப் பொருட்களை மட்டும் தவறாது பெற்றுக்கொள்ளும் நோக்குடன் செயற்படுகிறார்கள். ஏற்கனவே வலி வடக்கில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்குமாறு தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வந்தனர். நிலக்கண்ணிவெடிகள் மிதிவெடிகள் அகற்றும் பணிகள் முடிவடைந்த பின்னர் படிப்படியாக மக்களை மீளக் குடியமர அனுமதி வழங்கப்பட்டது.
இருப்பினும் அப்பகுதிக்கு சென்று தமது வீடுகளை, காணிகளை துப்புரவு செய்வதற்கோ குடியமர்வதற்கோ ஆர்வம் காட்டாமல் தாம் வாழும் பகுதிகளில் இருந்துகொண்டே நிவாரணப் பொருட்களை மட்டும் வாங்கி வருகின்றனர். இதன் காரணமாகவே பிரதேச செயலகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இது தொடர்பாக யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமாரிடம் கேட்டபோதும்,
அரசாங்கம் மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவ தற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இவ்வேளையில் மக்களும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்வதில் ஆர்வமும் அக்கறையும் காட்டவேண்டும். இதனாலேயே இவ்வாறான நிர்வாக ரீதியிலான தீர்மானங்கள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

Thursday, February 17, 2011

சிறுபிள்ளைகளை காண்பித்து பிச்சையெடுக்கும் பெண்களுக்கு எதிராக நடவடிக்கை.

சிறு பிள்ளைகளைக் காண்பித்து அதன் மூலம் பொதுக்களின் அனுதாபத்தைப் பெற்று பிச்சையெடுக்கும் பெண்களுக்கு எதிராக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என்று அதன் தலைவி திருமதி அனோமா திஸாநாயக்க தெரிவித்தார்.
பிள்ளைகள் தங்கள் சிறுபராயத்தை சுதந்திரமாக கழிப்பதற்கான பிறப்புரிமையைப் பெற்றுள்ளார்கள். அந்த உரிமையை அப்பிள்ளைகளைப் பெற்றெடுத்த தாய்க்கு கூட பறித்து விட முடி யாது என்று சிறுவர் பாதுகாப்பு சட்டம் வலியுறுத் துகின்றது.
வீதியில் கைக்குழந்தைகளையும் சிறு பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு பிச்சையெடுக்கும் பெண்களை அந்தந்த பிரதேசங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களில் இருக்கும் சிறுவர் பராமரிப்பு மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்து சம்பந்தப்பட்ட பெண்களை நீதிமன்ற உத்தரவின் பெயரில் இரண்டு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைத்து பிள்ளைகளை சிறுவர் பாதுகாப்பு இல்லங்களில் சேர்த்து அவர்களை நல்ல முறையில் பராமரிப்பார்கள்.
இரண்டு வார காலத்தில் அப்பெண் போதைவஸ்து உபயோகித்தல், அவற்றை விற்பனை செய்தல், சிறு திருட்டுகள், விலைமாதர் தொழில் புரிகின்றமை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடவில்லை என்பது நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றம் இப்படியான தொழிலில் ஈடுபடலாகாது என்று எச்சரித்து பிள்ளைகளையும் தாயமாரிடம் மீண்டும் ஒப்படைத்து விடும்.
அதேவேளையில், மேலே குறிப்பிட்ட குற்றச்செயல்களில் இப்பெண்கள் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கி தண்டிக்கும், தாய் சிறையில் இருக்கும் காலத்தில் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பி சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் மிகவும் கவனமாக வளர்ப்பார்கள் என்று திருமதி அனோமா திஸாநாயக்க தெரிவித்தார்.

Wednesday, February 16, 2011

நாடு பூராகவும் 40 இலட்சம் தென்னை மரக்கன்றுகள் நட திட்டம்.

இந்த வருடத்தில் நாடு பூராவும் 40 இலட்சம் தென்னை மரக்கன்றுகளை நட உள்ளதாக தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சர் ஜகத் புஷ்பகுமார நேற்று கூறினார்.
திவிநெகும’ திட்டத்தின் கீழ் அடுத்த மாதம் 13 இலட்சம் தென்னை மரக்கன்றுகள் நடப்படவுள்ளதோடு ஒக்டோபர் மாதத்தில் 27 இலட்சம் தென்னை மரக்கன்றுகளும் நட உள்ளதாகவும் அவர் கூறினார்.
‘திவி நெகும’ தேசிய திட்டம் குறித்து விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், 10 இலட்சம் வீட்டு பொருளாதார அபிவிருத்தி அலகுகளை முன்னெடுக்கும் திட்டத்தினூடாக தெங்கு பயிர்ச்செய்கையையும் ஊக்குவிக்க உள்ளோம். ஒவ்வொரு வருடமும் 20 இலட்சம் தென்னை மரங்களை நட வேண்டும் என்ற திட்டம் ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது.
ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் குறிப்பிட்டளவு தென்னை மரங்களை நட திட்டமிட்டுள்ளோம். இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதன் மூலம் தெங்கு உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.
2 வருடங்களுக்கு முன்னர் வடக்கு கிழக்கில் தெங்கு பயிரிடப்படவில்லை. ஆனால் வடக்கில் பளை, அச்சுவேலி போன்ற இடங்களில் தெங்கு நாற்று மேடைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு குச்சவெளி, பாசிக்குடா போன்ற இடங் களிலும் தெங்கு நாற்றுமேடைகள் அமை க்கப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கில் தெங்கு உற்பத்தியை மேம்படுத்த உள்ளோம்.
தென்னை தட்டுப்பாடு காரணமாக கேரளாவில் இருந்து தேங்காய் இறக்குமதி செய்யப்பட்டதாக குற்றஞ் சாட்டப்பட்டது. ஆனால் ஒரு தேங்காய் கூட நாம் இறக்குமதி செய்யவில்லை என்றார்.
அமைச்சின் செயலாளர் அநுர சிறிவர்தன கூறியதாவது: வீட்டுத் தோட்டங்களிலோ காணிகளிலோ மரம் நடக்கூடிய சகல இடங்களில் மரம் நட திட்டமிட்டுள்ளோம். கடந்த வருடத்தில் தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டது.
கடந்த வருடம் 2700 மில்லியன் தேங்காய் உற்பத்தி எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2317 மில்லியன் தேங்காய்களே உற்பத்தி செய்யப்பட்டன. 400 மில்லியன் குறைவாகவே தேங்காய் பெறப்பட்டது. இந்தத் திட்டத்தினூடாக தெங்குப் பயிர்ச் செய்கைக்கு பாரிய உந்து சக்தி வழங்கப்படும் என்றார். இந்த நிகழ்வில் சிரேஷ்ட அமைச்சர் அதாவுத செனவிரத்ன, அமைச்சர் எஸ். எம். சந்திரசேன உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tuesday, February 15, 2011

தாயகத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்துவோரை இலங்கையர் என அழைக்க முடியாது.

நாட்டில் அமைதி நிலவும் போது தாயகத்திற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் சர்வதேச நாடுகளில் பிரசாரம் செய்வோரை இலங்கையர் எனக் கூட கூறமுடியாது.
அத்தகையோர் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவர்கள் என மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பிபினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
முப்பது வருடகால யுத்தம் நீங்கி நாட்டில் அமைதிச் சூழல் நிலவுவதுடன் அபிவிருத்தியில் நாடு கட்டியெழுப்பப்பட்டு வரும் வேளையில், நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெளிநாடுகளில் பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறார்.
இது தொடர்பில் கேட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த போதே இராதாகி ருஷ்ணன் எம். பி. இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:-
நாடு என்று வரும்போது அங்கு ஆளும்கட்சி என்றோ, எதிர்க்கட்சி என்றோ அல்லது தமிழ், சிங்களம், முஸ்லிம் என்றோ பார்க்க முடியாது. ஏதாவது பிரச்சினைகள் ஏற்படும் போது அது பொதுவானதாக எடுத்துக்கொள்ளப்பட்டு இலங்கையர் என்ற ரீதியில் செயற்படுவது முக்கியமாகும்.
அதனை விட்டு விட்டு நாட்டிற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ செயற்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. எதிர்க் கட்சித்தலைவரோ அல்லது வேறு எவராக இருந்தாலும் அவர்களை இலங்கையர் என்று கூட சொல்ல முடியாது. எமது அயல் நாடான இந்தியாவில் 28 மாநிலங்கள் உள்ளன. பல இன, மத, மொழி பேசும் மக்கள் இங்கு வாழ்கின்றனர்.
பல்வேறு பிரச்சினைகள் அங்கு உள்ள போதும் நாடு என்று வரும்போது பொது உணர்வுடன் இந்தியர் என்று அவர்கள் செயற்படுவது சிறந்த முன்னுதாரணமாகும்.
அதே போன்று உள்நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம். வெளிநாடுகளில் நமது நாட்டைக் காட்டிக்கொடுப்பதோ நாட் டிற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் செயற்படுவதோ வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார்.

Saturday, February 12, 2011

பொதுநலவாய ஆசிய பிராந்திய பாராளுமன்ற மாநாடு இன்று இந்திய, பாக். சபாநாயகர்கள் கொழும்பு வருகை.

பொதுநலவாய ஆசிய பிராந்திய பாராளுமன்ற மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவு மற்றும் இலங்கை பாராளுமன்ற சபாநாயகர்கள், எம்.பிக்கள், பாராளுமன்ற செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
இன்று முதல் 15 ஆம் திகதி வரை ஹில்டன் ஹோட்டலில் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பலர் நேற்று இலங்கையை வந்தடைந்ததாக பாராளுமன்ற உயரதிகாரி ஒருவர் கூறினார்.
மாநாட்டையொட்டி நேற்று பாராளுமன்ற செயலாளர்களின் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது
இன்று ஆரம்பமாகும் மாநாடு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் பங்களாதேஷ் சபாநாயகர் அப்துல் ஹமீத், இந்திய லோக் சபா சபாநாயகர் மீராகுமார், மாலைதீவு சபாநாயகர், பாகிஸ்தான் செனட் சபை பிரதி தலைவர் மற்றும் அந்நாட்டு பாராளு மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். வறுமை ஒழிப்பு, காலநிலை மாற்றம், இயற்கை அனர்த்தங்களும், தாயும் சேயும் என்பன தொடர்பில் இங்கு முக்கியமாக ஆராயப்பட உள்ளதாக பாராளுமன்ற உயரதிகாரி கூறினார்.
இலங்கை வருகை தந்துள்ள பொதுநல வாய ஆசிய பாராளுமன்ற அமைப்பின் பிரதிநிதிகள் எதிர்வரும் 14 ஆம் திகதி சீகிரிய பிரதேசத்திற்கு விஜயம் செய்ய உள்ளனர் இறுதி நாளான 15 ஆம் திகதி கண்டி தலதா மாளிகை, பேராதனை பூங்கா, பின்னவல யானைகள் சரணாலயம் என்பவற்றுக்கும் செல்ல உள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இதேவேளை, பொதுநல வாய நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர் களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்த இந்திய சபாநாயகர் ஸ்ரீமதி மீராகுமார், பாக். சபாநாயகர் ஜனாபா பெரோஷ்கான் பாக். செனட் சபையின் தலைவர் மிர், முகம்மத் ஜமால்கான் ஆகி யோரை விமான நிலையத்தில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று வரவேற்றார்.
சபாநாயகருடன் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வரும் இவர்களை வர வேற்பதற்காக சென்றிருந்தார்.

Friday, February 11, 2011

கிழக்கு மற்றும் வடக்கில் வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த இடங்கள் பேணிப் பாதுகாப்பு.

கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் கடந்த மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்ற பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் காரணமாக கைவிடப்பட்டிருந்த வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த இடங்களைப் பேணிப் பாதுகாக்க தேசிய பாரம்பரிய அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தேசிய பாரம்பரிய அமைச்சின் கீழ் இயங்கும் தொல்பொருளாய்வு திணைக்களத்தால் இப் பகுதிகளில் பல இடங்களில் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பண்டையகாலத்தில் இலங்கை, சீனாவுக்கும் உரோமுக்கும் இடையேயான வர்த்தகத் தொடர்பைபேண மையங்களாக திகழ்ந்த கோகன்ன மற்றும் மாந்தொட்ட கோட்டைகள், திரியாயப் மற்றும் குச்சவெளி பகுதிகள், கோணஸ்வரம் கோவில், கதுருகொட ஆலயம் மற்றும் அதன் நடைபாதை போன்ற வரலாற்று முக்கியதுவம் பெற்ற இடங்களை பேணிப் பாதுகாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ் ஆய்வு நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்கு தேசிய பாரம்பரிய அமைப்பைச் சேர்ந்த டாக். ஜகத் பாலசூரிய, இலங்கைக்கான நெதர்லாந்து உயர் ஆணைக்குழுவின் பிரதிச் செயலாளர். திரு.ஜகோப் பீரென்டென்ஸ் மற்றும் தொல்பொருளாய்வு திணைக்களத்தின் பொதுப் பணிப்பாளர் டாக்.செனரத் திசானாயக ஆகியோர் இப்பிரதேசங்களுக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டனர்.
இப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு சிறந்த ஒத்துழைப்பு வழங்கி வரும் யாழ் தமிழ் சமூகத்திற்கு அமைச்சர் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

Thursday, February 10, 2011

தமிழ் பேசும் பொலிஸார் 2500 பேர் விரைவில் நியமனம்.

பொலிஸ் சேவையில் மேலும் 2500 தமிழ், முஸ்லிம் இளைஞர், யுவதிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸ் மா அதிபர் கலாநிதி மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.
ஏற்கனவே கொன்ஸ்டபிள் தரத்தில் 500 பேரை இணைத்துக் கொண்டுள்ளதுடன், புதிதாக உப பரிசோதகர்கள், பெண் பொலிஸ் பரிசோதகர்கள், பெண் கொன்ஸ்டபிள்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும், தற்போது அதற்கான நேர்முகத் தேர்வுகள் நடைபெற்று வருவதாகவும், பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
அரச கரும மொழிகள் ஆணைக்குழுவால் மும்மொழிகளிலும் வெளியி டப்பட்டுள்ள பொலிஸாருக் கான உரையாடல்கள் அடங் கிய கைநூலை பொலிஸ் திணைக்களத்திற்கு உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு பொலிஸ் மா அதிபர் இதனைத் தெரிவித்தார்.
தேசிய மொழிகள், சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் தலைமையில் கொழும்பு தொழில்வாண்மை யாளர்களின் அமைப்பின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அமைச்சின் செயலாளர் திருமதி மல்காந்தி விக்கிரமசிங்க, அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் என். செல்வகுமாரன், முன்னாள் தலைவர் ராஜா கொல்லுரே, கனேடிய உயர் ஸ்தானிகர் புறூஸ் லெவி, பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கனேடிய அரசின்- சீடா நிறுவனத்தின் அனுசரணையில் பொலிஸாருக்கான உரையாடல் நூல் மூன்று மொழிகளிலும் அச்சிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக பொலிஸ் திணைக் களத்திற்கென 65 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளதுடன் அவற்றை பொலிஸ் நிலையங்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கான வைபவத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11) பொலிஸ் தலைமையகத்தில் ஏற்பாடு செய்வதாகவும் இங்கு அறிவித்த பொலிஸ் மா அதிபர், பொலிஸாருக்கு ஆங்கில மொழி பயிற்சி நெறியொன்றை எதிர்வரும் மார்ச் மாதம் 15 ம் திகதிக்கு முன்னர் ஆரம்பிக்கவுள்ள தாகவும் குறிப்பிட்டார்.

Tuesday, February 8, 2011

பெய்து வரும் அடைமழையினால் குளங்கள் வழிகின்றன....

நாட்டிலுள்ள 59 பிரதான குளங்களில் 39 குளங்கள் நிரம்பி வழி வதாகவும், 20 குளங்களின் வான் கதவுகள் தொடர்ந்தும் திறந்து வைக்கப்பட்டி ருப்பதாகவும் நீர்ப்பாசனத திணைக்களத்தின் நீர் வள முகாமைத்துவப் பிரதிப் பணிப் பாளர் ஜனாகி மீகஸ்தென்ன கூறினார்.
பொலன்னறுவை மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் மீண்டும் கனத்த மழை பொழியத் தொடங்கியுள்ள தால் கெளடுல்ல நீர்த்தேக்கத்தின் 11 வான் கதவுகள் நான்கு அடிகள் உயரப் படியும், மின்னேரியா குளத்தின் 8 வான் கதவுகள் ஐந்து அடிகள் உயரப்படியும் திறந்துவிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
அனுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோண மலை, பதுளை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை, புத்தளம், குருநாகல், வவுனியா, மன்னார், கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களிலுள்ள சகல குளங்களும் நிரம்பி வழிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த சில தினங்களாகப் பெய்து வந்த கனத்த மழை காரணமாக நெற் செய்கை, மரக்கறி மற்றும் பழச் செய்கை, கால்நடைகள் உட்பட வீதிகள் அடங்கலான உட்கட்டமைப்பு வசதிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் இவ்வெள்ளம், மண்சரிவு காரணமாக முழுமையாக அழிவுற்றுள்ள வீடுகளின் எண்ணிக்கை 2273 வரை உயர்ந்திருப்பதாகவும் 13 ஆயிரத்து 148 வரையான வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி கூறினார்.
இதேவேளை வெள்ளம், மண்சரிவு காரணமாக 85 ஆயிரத்து 387 குடும்பங் களைச் சேர்ந்த 3 இலட்சத்து 11 ஆயிரத்து 287 பேர் 744 முகாம்களில் நேற்றும் தங்கி இருந்ததாகவும் அவர் குறிப் பிட்டார்.
இவ்வெள்ளம், மண்சரிவு காரண மாக 3 இலட்சத்து 26 ஆயிரத்து 230 குடும்பத்தைச் சேர்ந்த 12 லட்சத்து 23 ஆயிரத்து 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் காரணமாக அம்பாறை, மாவட்டத்தில் இருப்பிடங்களை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கியிருந்த ஆயிரத்திற்கும் மேற் பட்ட குடும்பங்கள் நேற்று முன்தினம் வீடுகளுக்குத் திரும்பியுள்ளன என்றும் அவர் கூறினார்.

Monday, February 7, 2011

பெய்துவரும் மழையினால் 12 லட்சத்து 57 ஆயிரத்து 366 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் நேற்றுத் தெரிவித்தார்.

வெள்ளம் காரணமாக திருமலை மாவட்டத்தில் 87 ஆயிரத்து 191 குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 24 ஆயிரத்து 556 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 21 ஆயிரத்து 220 குடும்பங்களைச் சேர்ந்த 78 ஆயிரத்து 510 பேர் 176 முகாம்களில் தங்கியுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் 74 ஆயிரத்து 432 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 82 ஆயிரத்து 686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6558 குடும்பங்களைச் சேர்ந்த 24 ஆயிரத்து 923 பேர் 81 முகாம்களில் தங்கியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 61 ஆயிரத்து 350 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 40 ஆயிரத்து 336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 25 ஆயிரத்து 19 குடும்பங்களைச் சேர்ந்த 94 ஆயிரத்து 354 பேர் 197 முகாம்களில் தங்கியுள்ளனர்.
அனுராதபுரம் மாவட்டத்தில் 85 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொலன்னறுவை மாவட்டத்தில் 6124 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்து 739 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில் 6247 குடும்பங் களைச் சேர்ந்த 17 ஆயிரத்து 631 பேர் 68 முகாங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் 20 ஆயிரத்து 789 குடும்பங்களைச் சேர்ந்த 79 ஆயிரத்து 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6513 குடும்பங்களைச் சேர்ந்த 24 ஆயிரத்து 876 பேர் 79 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை அனுராதபுரம், பொலன்னறுவை, வவுனியா, கிளிநொச்சி, மட்டக்களப்பு, பதுளை, அம்பாறை, திருகோணமலை, மாத்தளை ஆகிய மாவட்டங்களிலுள்ள குளங்களும், நீர்த்தேக்கங்களும் நிரம்பி வழிவதுடன், இவற்றின் வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன. இதன் விளைவாக வடமத்திய கிழக்கு மாகாணங்களின் பெரும்பாலான பகுதிகள் வெள்ள நீரில் முழுமையாக மூழ்கியுள்ளன.
இம் மாவட்டங்களில் மக்களின் இயல்வு வாழ்வும் வாகனப் போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. முப்படையினரும் பொலிஸாரும் மீட்புப் பணிகளிலும், நிவாரண நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

Sunday, February 6, 2011

மக்களே உதவ முன் வாருங்கள்.....

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட உள்ள மக்களுக்கு உதவ முன் வாருங்கள் கிழக்குமகள்..

கிழக்கில் உதயம் சுவிஸ்.........

சுவிஸ் தலைநகர் பேர்ணில் அண்மையில் கூடிய உதயம் நிர்வாகசபை கிழக்கிலங்கையில் வெள்ளத்தின் பின்னரான நிவாரணப்பணிகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளது. கிழக்குமாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் ஏககாலத்தில் இந்தப்பணி மேறn; காள்ளப்படும். இந்த நிவாரணப்பணிகளுக்கென 1.5மில்லியன் ரூபாய்களை உதயம நிர்வாகம் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிதியானது கல்வி நிவாரணப்பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும். கிராமமக்கள், மற்றும் உள்ளுர் அமைப்புக்களின் ஒத்துழைப்புக்களுடன் ஒருவார காலத்திற்கு கிழக்கிலங்கை முழுவதும் மேற்கொள்ள்படவுள்ள இந்நிவாரண நடவடிக்கையின்போது மாணவர்களுக்கு கற்கை உபகரணங்கள் வழங்கப்படுவதுடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் அவற்றின் உடைமைகள் என்பனவற்றைச் சீர்செய்யும் பணியும் இடம்பெறும். இந்த ஒருவார காலத்தில் குறைந்தது 5மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான பணியைச்செய்ய முடியுமென உதயம் சுவிஸ் நம்புகின்றது. உதயம் கிழக்கின் ஏற்பாட்டில், உதயம் சுவிஸின் அனுசரணையில் மேற்கொள்ளப்படும் இந்தப்பாரிய பணியைக் கண்காணிக்கவும் ஒருங்கிணைத்து நெறிப்படுத்தவும் உதயம் சுவிஸ் உறுப்பினர்களைக்கொண்ட குழுஒன்று கிழக்கிற்குச் செல்கின்றது. இந்த ஒருங்கிணைப்பு நெறிப்படுத்தல் பணிகள் உதயம் சுவிஸ் நிர்வாகம் சார்பில் அதன் நிதியாளர் கணபதிப்பிள்ளை துரைநாயகம் தலைமையில்இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

உதயம் நிர்வாகம்

Postal: Uthayam, Postfach 4261, 6002 Lucerne, Switzerland
Tel: 0041 41 240 21 57 --- Fax: 0041 41 311 02 15 --- E-Mail: uthayam@bluemail.ch

Saturday, February 5, 2011

500 மீற்றர் நீளம் 100 மீற்றர் அகலம் 20 ஏக்கர் நிலப்பரப்பில் பாரிய மண்சரிவு.

* வலப்பனையில் மக்கள் வெளியேற்றம்

* கால்நடைகள் உயிரிழப்பு மர்லின் மரிக்கார்

நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பலப்பத்தன, தியனில்ல என்ற இடத்தில் சுமார் இருபது ஏக்கர் நிலப்பரப்பில், மண்சரிவு ஏற்பட்டிருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வுகள் மற்றும் சேவை பிரிவு தலைவர் ஆர். எம். எஸ். பண்டார நேற்று தெரி வித்தார்.

500 மீற்றர் நீளமும், 100 மீற்றர் அகலமும் கொண்ட மண்சரிவினால் இரண்டு வீடுகள் மூடுண்டுள்ளதுடன், சுமார் ஐம்பது குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு ராகல சிங்கள மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டிருப்ப தாகவும் அவர் கூறினார். அதேநேரம், அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்குக் கனத்த மழை பெய்யக்கூடிய காலநிலை நிலவுவதால் நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை ஆகிய நான்கு மாவட்டங்களிலும் மண்சரிவுகள் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் நிலவுவதாகவும், பிரதேசவாசிகள் விழிப்பாக இருப்பதும் அவசியம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ நிலைய நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் கூறுகையில்,

தியனில்ல மண்சரிவில் சிக்குண்டு ஏழு மாடுகள் உயிரிழந்துள்ளன. இப்பகுதி யில் வசிக்கின்ற மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதேநேரம், வலப்பனை மகாவெல என்ற இடத்திலும், வெவன்தோட்டத்திலுள்ள கரண்டியெல்ல என்ற இடத்திலும், கும்பல்கமுவவிலும் மண் சரிவு ஏற்படக் கூடிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

கும்பல்கமுவ பகுதியில் வசித்து வந்த 19 குடும்பங்களும் மகாவெல பகுதியிலிருந்து 15 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேரும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

இதேவேளை, கண்டி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் மண் சரிவு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் கண்டி மாவட்ட அலுவலகப் பூகற்பவியலாளர் விஜேவிக்கிரம கூறினார்.

இதன் காரணத்தினால் மண் சரிவு தொடர்பான தகவல்களை 081-2575063 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறியத் தருமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

Friday, February 4, 2011

மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழையினால்......

வடக்கின் கல்வி அபிவிருத்திக்க 310 மில்லியன் வட மாகாணசபை ஒதுக்கீடு.

வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களின் கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு வடமாகாணசபை இவ்வாண்டு 310 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.
மாகாண கல்வி அமைச்சுக்கு இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்விப் பணிப்பாளர் பி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
இந்த நிதியின் மூலம் 335 பாடசாலைகளுக்கு 2500 கணினிகளும் 10 ஆயிரம் மாணவர்களுக்கும் ஆயிரம் ஆசிரியர்களுக்குமுரிய தளபாடங்கள் கொள்முதல் செய்யப்படுமென தெரிவிக்கப்படுகின்றது

Thursday, February 3, 2011

சேனநாயக்க சமுத்திரத்தின் 5 வான் கதவுகள் திறப்பு மக்கள் பீதி.

இங்கினியாகல சேனநாயக்க சமுத்திரத்தின் அணை உடைப்பெடுக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக அதன் ஐந்து வான் கதவுகள் நேற்றுக் காலை (02.02.11) திறந்துவிடப்பட்டன.
இங்கினியாகல பிரதேசத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக சேனநாயக்க சமுத்திரத்தின் நீர் மட்டம் உயர்வடைந்துள் ளது. இதனால், அணை உடைப்பெடுத்துப் பாரிய அனர்த்தம் ஏற்படுவதைத் தவிர்க்க வான் கதவுகள் அரையடி உயரத்திற்குத் திறக்கப்பட்டதாக இங்கினியாகல பொலிஸார் தெரிவித்தனர்.
வான் கதவுகள் திறக்கப்படுவது குறித்து, அந்தப் பிரதேசத்தின் மக்களுக்கு அறிவுறுத்தியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
வான்கதவுகள் திறக்கப்படுவதால் கல்முனை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை, இங்கினியாகல, தமண ஆகிய பிரதேசங் களின் தாழ்ந்த பகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகுமென எச்சரிக்கப்பட்டது.
வான்கதவுகள் திறக்கப்படும் செய்தி காட்டுத்தீ போல் பரவியதனால் நேற்று அம்பாறை மாவட்டத்தில் பதற்றமும், பீதியும் நிலவியது. பல பொலிஸ் நிலையங்களிலும் எச்சரிக்கை ஒலிபரப்பு செய்யப்பட்டது. இச் செய்தியால் பாடசா லைகள், அலுவலகங்கள் யாவும் காலை 9.30 மணியுடன் இழுத்து மூடப்பட்டன. மக்கள் பாதுகாப்பான இடம் தேடிச் சென்றனர். சேனநாயக்க சமுத்திரத்தின் நீர் மட்டம் காலையில் 104 அடியாகக் காணப்பட்டது. அதனால் வான்கதவு திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, மாவடிப்பள்ளி கிட்டங்கி தாம்போதிகளில் மீண்டும் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. போக்குவரத்து துண்டிக் கப்பட்டுள்ளது. மண்டூர் வெல்லாவெளி வீதியில் 3 தாம்போதிகளுக்கு மேல் 4 அடிவெள்ளம் பாய்கிறது. நவகிரி நீர்ப்பாசனக்குளம் திறந்துவிடப்பட்டதே காரணமாகும். அதனால் அப்பகுதி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளநிலைமை படுமோசமாக மாறுகிறது. அடைமழையும் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது.

பல வயல் நிலங்கள் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கின வெள்ளம் வடிந்த பகுதிகளில் மீண்டும் வெள்ளம்.

கிழக்கு மாகாணத்தில் மீண்டும் பெய்து வரும் அடைமழையினால் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் வடிந்து காணப்பட்ட அனைத்து பகுதிகளிலும் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி, கிறான் மற்றும் வவுனதீவு, வெல்லாவெளி, களுவாஞ்சிகுடி, காத்தான்குடி ஆகிய பகுதிகள் உட்பட ஏறாவூர் நகர், பட்டிப்பளை, மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மீண்டும் தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் பல குடும்பங்கள் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தங்கியிருக்கின்றனர்.
கடந்த ஜனவரி மாதத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1346.5 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி எஸ். சிவதாஸ் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதத்தின் முதலாம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரை இம் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
ஜனவரி மாதத்தில் 8 ஆம் திகதியன்று 331.2 மில்லி மீற்றர் ஒருநாளுக்கான அதிக மழை வீழ்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் இடம் பெயர்ந்த மக்களுக்கு சமைத்த உணவு வழங்குவதற்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு 850 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளது.
275 நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த 42295 குடும்பங்களைச் சேர்ந்த 165491 பேருக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டது.
அதேவேளை மக்கள் இடம்பெயர்வின் போது ஏற்பட்ட அவசர செலவுகளுக்காக 5 இலட்சம் ரூபாவும் வழங்கப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக பாரிய வெள்ள நிலமை ஏற்பட்டுள்ளதுடன் சுமார் 40 ஆயரம் ஏக்கர் வயல் நிலங்களும் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தொடரும் மழையினால் நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி, காரைதீவு, அட்டாளைச்சேனை, ஒலுவில், அக்கரைப்பற்று, இறக்காமம், திருக்கோவில், ஆலையடிவேம்பு, பொத்துவில் அடங்கலான அனைத்து பிரதேசங்களிலும் மமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் பொதுப் போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளன.
அத்துடன் பாடசாலைகள், பொது நிறுவனங்கள் என்பன நேரகாலத்துடன் மூடப்பட்டன.

மீண்டும் கனத்த மழை காரணமாக மண்சரிவு போக்குவரத்து பாதிப்பு.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் நுவரெலிய அலுவலகப் பொறுப்பாளரான பூகற்பவியலாளர் லக்சிறி இந்திரதிலக்க குறிப்பிடுகையில், வலப்பனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மகாவெவ மண்சரிவு செயற்படத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக கீர்த்தி பண்டாரபுர மகா வித்தியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசித்து வந்த ஆறு குடும்பங்களும் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
இதேநேரம் வெலிமடை, நுவரெலியா நெடுஞ்சாலையிலும், புஸ்ஸல்லாவ, நுவரெலியா நெடுஞ்சாலையிலும் நேற்றுக் காலையில் மண்சரிவுகள் ஏற்பட்டன. இதனால் இப்பாதைகள் ஊடான போக்குவரத்து உடனடியாக ஸ்தம்பிதமடைந்தது. மணல் திட்டுக்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீராக்கும் பணியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினரும், பொலிஸாருடன் இணைந்து உடனடியாக ஈடுபட்டனர்.
இதேவேளை பதுளை - கண்டி வீதியில் ரந்தெனிகலை நீர்த்தேக்க அணைக்கட்டுக்கு அருகில் ரஜ மாவத்தையில் மண்சரிவு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து உடனடியாக நீர்த்தேக்க முகாமையாளர்களுக்கு அறிவித்தோம். அவர்கள் துரிதமாக செயற்பட்டு நீர் மட்டத்தைக் குறைத்துள்ளனர்.
இதேநேரம், இப்பாதை ஊடாக மண் ஏற்றும் லொறிகள் போன்ற கனரக வாகனங்கள் செல்லுவதற்கும் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

Wednesday, February 2, 2011

132 செ.மீ. அகலம்; 30 செ.மீ. உயரம் மிகப் பெரிய முத்திரை இன்று வெளியீடு.

இலங்கையில் பயன்படுத்தப்படும் நிலக்கரி மூலம் இயங்கும் வைஸ்ரோய் ரயிலுக்கு 25 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு இன்று மிகப்பெரிய முத்திரையொன்று வெளியிடப்பட உள்ளதாக தபால் சேவைகள் அமைச்சு கூறியது. 132 சென்றிமீற்றர் அகலமும் 30 சென்றி மீற்றர் உயரமும் கொண்ட இந்த முத்திரை இலங்கையில் வெளியிடப்படும் மிகப்பெரிய முத்திரையாகும்.
வைஸ்ரோய் ரயிலின் புகைப்படத்தை தாங்கிய முத்திரையுடன் மேலும் 3 முத்திரைகளும் அன்றைய தினம் வெளியிடப்பட உள்ளன. இலங்கையில் வைஸ்ரோய் ரயில் சுற்றுலாப் பயணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
முத்திரை வெளியீட்டு விழாவுக்கு வருகை தரும் அமைச்சர்களும் மேற்படி வைஸ்ரோய் ரயில் மூலம் கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து ரம்புக்கனை ரயில் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். முத்திரை வெளியிடும் வைபவம் ரம்புக்கனை ரயில் நிலையத்தில் நடைபெறும்.

Tuesday, February 1, 2011

கொமன்வெல்த் கேம்ஸ் 2018 அம்பாந்தோட்டை அடையாளச் சின்னம் ஜனாதிபதியிடம் கையளிப்பு.

இலங்கையின் அம்பாந்தோட்டையில் 2018 இல் நடைபெற உள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிக்கான அடையாளச் சின்னம் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவிடம் கையளிக்கப்பட்டது.
அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற இது தொடர்பான நிகழ்வில் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இந்தச் சின்னத்தைக் கையளித்தார்.
அமைச்சர் டிலான் பெரேரா பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாட்டுக் குழுவின் இணைத் தலைவரும் மத்திய வங்கி ஆளுநருமான அஜித் நிவாட் கப்ரால் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு நிறவனம் மற்றும் தேசிய ஒலிம்பிக் கமிட்டி ஆகியவற்றின் தலைவருமான ஹேமசிறி பெர்னான்டோ இளைஞர்களுக்கான நாளைய அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ உட்படப் பலர் இந்நிகழ்வில் லந்துகொண்டனர்.

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் மழை மட்டு., திருமலையில் வெள்ள அபாயம் நிரம்பி வழியும் நிலையில் 29 குளங்கள்.

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையை அடுத்து கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் வெள்ள நிலை ஏற்பட்டுள்ளது.
திருகோணமலை, மட்டக்களப்பு, அநுராதபுரம், பொலன்னறுவை, அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களில் 29 குளங்கள் நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்தது. பாரிய வெள்ளத்தின் பின் இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்த கிழக்கு மக்கள் தொடர் மழையினால் மீண்டும் பாதிக்கப் பட்டுள்ளனர்.
மீண்டும் வெள்ளம் ஏற்பட்டால் அதற்கு முகம் கொடுப்பதற்கான சகல முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பில் அரச அதிபர்கள் மற்றும் அமைச்சு அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கு அருகில் கிழக்கே மீண்டும் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாகவே வடக்கு, கிழக்கு, வட மத்திய, மத்திய, ஊவா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மழை பெய்து வருவதாக கால நிலை அவதான நிலையம் கூறியது. ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று காலை 8.00 மணியுடன் முடி வடைந்த 24 மணி நேரத்தில் திருகோண மலையில் 92.8 மி. மீ. உம் வவுனியாவில் 92.0 மி. மீ. உம் கூடுதலாக மழை பெய்துள்ளது.
தொடர் மழையினால் நாட்டிலுள்ள 59 குளங்களில் 58 குளங்களின் நீர் மட்டம் 75 வீதத்தை விட அதிகரித்துள்ள தாக நீர்ப்பாசனத் திணைக்கள நீர்வள முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன கூறினார்.
திருகோணமலையில் 3 குளங்களும் பொலன்னறுவையில் 4 குளங்களும் அநுராதபுரத்தில் 8 குளங்களும் குருணாகலை யில் 8 குளங்களும் பதுளையில் 4 குளங் களும் வவுனியாவில் இரு குளங்களும் நிரம்பி வழிவதாகவும் அவர் தெரிவித்தார். பராக்கிரம சமுத்திரத்தின் 8 வான் கதவுகளும் கவுடுல்ல அணைக்கட்டின் 8 வான் கதவுகளும் ராஜாங்கனை அணைக் கட்டின் 2 வான் கதவுகளும் மின்னேரிய குளத்தின் 7 வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.
வெள்ளம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 92 குடும்பங்களைச் சேர்ந்த 362 பேர் பாதிக்கப்பட்டு மூன்று முகாம் களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெருகலில் 5 குடும்பங்களும் தம்பலகாமத் தில் 19 குடும்பங்களும் குச்சவெளியில் 50 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் கூறியது.
பாதிக்கப்படும் மக்களுக்குத் தேவையான சகல உதவிகளும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரவீர கூறினார்.