Tuesday, February 15, 2011

தாயகத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்துவோரை இலங்கையர் என அழைக்க முடியாது.

நாட்டில் அமைதி நிலவும் போது தாயகத்திற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் சர்வதேச நாடுகளில் பிரசாரம் செய்வோரை இலங்கையர் எனக் கூட கூறமுடியாது.
அத்தகையோர் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவர்கள் என மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பிபினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
முப்பது வருடகால யுத்தம் நீங்கி நாட்டில் அமைதிச் சூழல் நிலவுவதுடன் அபிவிருத்தியில் நாடு கட்டியெழுப்பப்பட்டு வரும் வேளையில், நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெளிநாடுகளில் பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறார்.
இது தொடர்பில் கேட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த போதே இராதாகி ருஷ்ணன் எம். பி. இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:-
நாடு என்று வரும்போது அங்கு ஆளும்கட்சி என்றோ, எதிர்க்கட்சி என்றோ அல்லது தமிழ், சிங்களம், முஸ்லிம் என்றோ பார்க்க முடியாது. ஏதாவது பிரச்சினைகள் ஏற்படும் போது அது பொதுவானதாக எடுத்துக்கொள்ளப்பட்டு இலங்கையர் என்ற ரீதியில் செயற்படுவது முக்கியமாகும்.
அதனை விட்டு விட்டு நாட்டிற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ செயற்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. எதிர்க் கட்சித்தலைவரோ அல்லது வேறு எவராக இருந்தாலும் அவர்களை இலங்கையர் என்று கூட சொல்ல முடியாது. எமது அயல் நாடான இந்தியாவில் 28 மாநிலங்கள் உள்ளன. பல இன, மத, மொழி பேசும் மக்கள் இங்கு வாழ்கின்றனர்.
பல்வேறு பிரச்சினைகள் அங்கு உள்ள போதும் நாடு என்று வரும்போது பொது உணர்வுடன் இந்தியர் என்று அவர்கள் செயற்படுவது சிறந்த முன்னுதாரணமாகும்.
அதே போன்று உள்நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம். வெளிநாடுகளில் நமது நாட்டைக் காட்டிக்கொடுப்பதோ நாட் டிற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் செயற்படுவதோ வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment