Friday, February 4, 2011

வடக்கின் கல்வி அபிவிருத்திக்க 310 மில்லியன் வட மாகாணசபை ஒதுக்கீடு.

வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களின் கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு வடமாகாணசபை இவ்வாண்டு 310 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.
மாகாண கல்வி அமைச்சுக்கு இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்விப் பணிப்பாளர் பி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
இந்த நிதியின் மூலம் 335 பாடசாலைகளுக்கு 2500 கணினிகளும் 10 ஆயிரம் மாணவர்களுக்கும் ஆயிரம் ஆசிரியர்களுக்குமுரிய தளபாடங்கள் கொள்முதல் செய்யப்படுமென தெரிவிக்கப்படுகின்றது

No comments:

Post a Comment