Friday, February 11, 2011

கிழக்கு மற்றும் வடக்கில் வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த இடங்கள் பேணிப் பாதுகாப்பு.

கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் கடந்த மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்ற பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் காரணமாக கைவிடப்பட்டிருந்த வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த இடங்களைப் பேணிப் பாதுகாக்க தேசிய பாரம்பரிய அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தேசிய பாரம்பரிய அமைச்சின் கீழ் இயங்கும் தொல்பொருளாய்வு திணைக்களத்தால் இப் பகுதிகளில் பல இடங்களில் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பண்டையகாலத்தில் இலங்கை, சீனாவுக்கும் உரோமுக்கும் இடையேயான வர்த்தகத் தொடர்பைபேண மையங்களாக திகழ்ந்த கோகன்ன மற்றும் மாந்தொட்ட கோட்டைகள், திரியாயப் மற்றும் குச்சவெளி பகுதிகள், கோணஸ்வரம் கோவில், கதுருகொட ஆலயம் மற்றும் அதன் நடைபாதை போன்ற வரலாற்று முக்கியதுவம் பெற்ற இடங்களை பேணிப் பாதுகாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ் ஆய்வு நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்கு தேசிய பாரம்பரிய அமைப்பைச் சேர்ந்த டாக். ஜகத் பாலசூரிய, இலங்கைக்கான நெதர்லாந்து உயர் ஆணைக்குழுவின் பிரதிச் செயலாளர். திரு.ஜகோப் பீரென்டென்ஸ் மற்றும் தொல்பொருளாய்வு திணைக்களத்தின் பொதுப் பணிப்பாளர் டாக்.செனரத் திசானாயக ஆகியோர் இப்பிரதேசங்களுக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டனர்.
இப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு சிறந்த ஒத்துழைப்பு வழங்கி வரும் யாழ் தமிழ் சமூகத்திற்கு அமைச்சர் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

No comments:

Post a Comment