Wednesday, February 23, 2011

இரட்டைப் பிரஜாவுரிமை இடைநிறுத்தம் ஜனாதிபதி விளக்கம்.

இரு நாடுகளைப் பிரதிநிதித்துவம் படுத்தும் வகையிலான இரட்டைப் பிரஜா வுரிமை வழங்கும் நடைமுறை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பத்திரிகை ஆசிரியர்கள் வானொலி தொலைக்காட்சி பொறுப்பதிகாரிகளை நேற்று அலரி மாளிகையில் சந்தித்த போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த சலுகையைப் பயன்படுத்தி சிலர் இலங்கைக்கு துரோகம் இழைக்கும் சதிகளில் ஈடுபட லாம் என்ற சந்தே கம் எழுந்திருப்பத னால் இவ்வாறான பிரஜாவுரிமை கோரி விண்ணப்பி ப்பவர்கள் பற்றி நன்கு விசாரணை செய்த பின்னரே அவர்க ளின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும்.
இது பற்றி ஒரு தீர்க்க மான முடிவை எடுப்பதற்காக அமைச்சர்கள் மட்டத்திலான குழுவொன்று இப்போது நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் அறிக்கையை பரிசீலனை செய்த பின்னரே இரட்டைப் பிரஜாவுரிமையை வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் மீண்டும் ஆரம்பிக்கும் என்று ஜனாதிபதி கூறினார்.

No comments:

Post a Comment