Monday, February 21, 2011

60 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஒத்திவைப்பு தேர்தல் ஆணையாளர்.

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு ஆட்சேபனை தெரிவித்து நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்படிருப்பதால் அறுபது (60) உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை ஒத்தி வைப்பதற்குத் தேர்தல் ஆணையாளர் தீர்மானித்துள்ளார்.
இதற்கேற்ப எதிர்வரும் மார்ச் மாதம் 17ம் திகதி 241 உள்ளூராட்சி மன்றங்களு க்குத் தேர்தல் நடாத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த 60 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் எதிர்வரும் 17ம் திகதி தேர்தலை நடாத்துவதற்கான நடவடிக் கைகளை இடைநிறுத்துமாறும் தேர்தல் ஆணையாளர் மாவட்ட மட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்களுககு ஆலோசனை வழங்கியுள்ளார் என்று பிரதி தேர்தல் ஆணையாளர் மஹிந்த பாலசூரிய கூறியுள்ளார்.
இந்த 60 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் நீதிமன்ற விசாரணைகள் நிறைவுற்று தீர்ப்பு வெளியான பின்னரே தேர்தலை நடாத்துவதற்கு திகதி நிர்ணயிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இவ் உள்ளூராட்சி மன்றங்களில் தபால் மூல வாக்களிப்பு க்கான வாக்களிப்பு பத்திரங்களை வழங்குவது, வாக்காளர் அட்டை விநியோகம் உட்பட தேர்தலோடு தொடர்புடைய சகல நடவடிக்கைகளும் இடைநிறுத்த ப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டில் 336 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன. அவற்றில் 301 உள்ளூ ராட்சி மன்றங்களுக்கு மார்ச் 17ம் திகதி தேர் தலை நடா த்துவதற்கு ஏற்கனவே தேர்தல் ஆணையாளர் தீர்மானித்தருந்தார். இருப்பினும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு ஆட்சேபனை தெரிவித்து நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் 60 உள்ளூராட்சி மக்கறங்களுக்கு மார்ச் 17ம் திகதி தேர்தலை நடாத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால் 35 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலைப் பின்னர் நடாத்துவதற்கும் தேர்தல் ஆணையாளர் ஏற்கனவே தீர்மானித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக் காளர் அட்டைகள் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் விநியோகிக்கப்படும் என்று தேர்தல் ஆணையாளர் அலுவலகம் அறிவித்து ள்ளது.
எதிர்வரும் மார்ச் 14 ஆம் திகதி வரை அவற்றை விநியோகிக்க தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருப்ப தாகவும் தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வாக்காளர் அட்டைகள் விநியோகம் முடிவடையும் திகதி வரை அவற்றை பத்திரமாக வைத்திருப்பதற்கு தபால் நிலையங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment