Tuesday, February 1, 2011

கொமன்வெல்த் கேம்ஸ் 2018 அம்பாந்தோட்டை அடையாளச் சின்னம் ஜனாதிபதியிடம் கையளிப்பு.

இலங்கையின் அம்பாந்தோட்டையில் 2018 இல் நடைபெற உள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிக்கான அடையாளச் சின்னம் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவிடம் கையளிக்கப்பட்டது.
அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற இது தொடர்பான நிகழ்வில் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இந்தச் சின்னத்தைக் கையளித்தார்.
அமைச்சர் டிலான் பெரேரா பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாட்டுக் குழுவின் இணைத் தலைவரும் மத்திய வங்கி ஆளுநருமான அஜித் நிவாட் கப்ரால் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு நிறவனம் மற்றும் தேசிய ஒலிம்பிக் கமிட்டி ஆகியவற்றின் தலைவருமான ஹேமசிறி பெர்னான்டோ இளைஞர்களுக்கான நாளைய அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ உட்படப் பலர் இந்நிகழ்வில் லந்துகொண்டனர்.

No comments:

Post a Comment