Sunday, February 6, 2011

கிழக்கில் உதயம் சுவிஸ்.........

சுவிஸ் தலைநகர் பேர்ணில் அண்மையில் கூடிய உதயம் நிர்வாகசபை கிழக்கிலங்கையில் வெள்ளத்தின் பின்னரான நிவாரணப்பணிகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளது. கிழக்குமாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் ஏககாலத்தில் இந்தப்பணி மேறn; காள்ளப்படும். இந்த நிவாரணப்பணிகளுக்கென 1.5மில்லியன் ரூபாய்களை உதயம நிர்வாகம் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிதியானது கல்வி நிவாரணப்பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும். கிராமமக்கள், மற்றும் உள்ளுர் அமைப்புக்களின் ஒத்துழைப்புக்களுடன் ஒருவார காலத்திற்கு கிழக்கிலங்கை முழுவதும் மேற்கொள்ள்படவுள்ள இந்நிவாரண நடவடிக்கையின்போது மாணவர்களுக்கு கற்கை உபகரணங்கள் வழங்கப்படுவதுடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் அவற்றின் உடைமைகள் என்பனவற்றைச் சீர்செய்யும் பணியும் இடம்பெறும். இந்த ஒருவார காலத்தில் குறைந்தது 5மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான பணியைச்செய்ய முடியுமென உதயம் சுவிஸ் நம்புகின்றது. உதயம் கிழக்கின் ஏற்பாட்டில், உதயம் சுவிஸின் அனுசரணையில் மேற்கொள்ளப்படும் இந்தப்பாரிய பணியைக் கண்காணிக்கவும் ஒருங்கிணைத்து நெறிப்படுத்தவும் உதயம் சுவிஸ் உறுப்பினர்களைக்கொண்ட குழுஒன்று கிழக்கிற்குச் செல்கின்றது. இந்த ஒருங்கிணைப்பு நெறிப்படுத்தல் பணிகள் உதயம் சுவிஸ் நிர்வாகம் சார்பில் அதன் நிதியாளர் கணபதிப்பிள்ளை துரைநாயகம் தலைமையில்இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

உதயம் நிர்வாகம்

Postal: Uthayam, Postfach 4261, 6002 Lucerne, Switzerland
Tel: 0041 41 240 21 57 --- Fax: 0041 41 311 02 15 --- E-Mail: uthayam@bluemail.ch

No comments:

Post a Comment