Friday, April 16, 2010

காலிமுகத்திடலில் ஜனாதிபதி....

தமிழ் சிங்களப் புத்தாண்டை தமது கிராமப் பிரதேசங்களில் கொண்டாடிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலையில் எண்ணெய் தேய்க்கும் பாரம்பரியக் கடமையை நிறைவேற்றியபின்னர் நேற்று கொழும்பு திரும்பும் வழியில் சற்று நேரம் காலி முகத்திடலில் தமது நண்பர்களுடன் உல்லாசமாக பொழுதைக் கழித்தார்.
விமானம் மூலம் கொழும்பு வந்த ஜனாதிபதி அலரி மாளிகைக்குச் செல்வதற்கு முன்னரே காலி முகத்திடலுக்குச் சென்றார்.
ஜனாதிபதியின் இத்திடீர் நடவடிக்கையால் அங்கு கூடியிருந்த பொது மக்கள் வியப்படைந்தனர். நாட்டில் அமைதியும் சமாதானமும் நிலவுவதை ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை உறுதிப்படுத்தியுள்ளதாக பொது மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment