Tuesday, May 4, 2010

பாராளுமன்றம் இன்று கூடுகிறது அமர்வுகள் தொடர்ந்து 4 நாட்களுக்கு.

ஏழாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு இன்று இடம்பெறுகின்றது. இன்று கூடும் பாராளுமன்றத்தை நான்கு நாட்களுக்கு கூட்டுவதற்கு நேற்று நடத்தப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி பாராளுமன்றச் செயலாளர் நாயகம் பி. டி. திஸாநாயக்க தெரிவித்தார்.
புதிய பாராளுமன்றத்தின் கட்சித் தலைவர்களின் முதலாவது கூட்டம் நேற்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.
இதன் போது இன்றும் நாளையும் அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கான விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டது. 6 ஆம் திகதி ஒழுங்கு விதிகளும் 7 ஆம் திகதி அனுதாபப் பிரேரணையும் இடம் பெறும் எனவும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment