Thursday, June 17, 2010

வடக்கு உள்ளுராட்சி மன்றங்களுக்கு 6800 மில்லியன் ஒதுக்கீடு வட மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

துரித அபிவிருத்தியை மேற்கொள்வதற்காக வட மாகாணத்தில் உள்ள 34 உள்ளுராட்சி மன்றங்களுக்கும் 6800 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். உள்ளுராட்சி சேவைகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் வடக்கிலுள்ள ஒவ்வொரு உள்ளுராட்சி மன்றங்களுக்கும் தலா 200 மில்லியன் ரூபா வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வுள்ளதாக அவர் குறிப்பிட்டார். வடக்கு கிழக்கு உள்ளுர் சேவைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் ஊடாக அரசாங்கம் இந்த நிதியை வழங்க வுள்ளது. இத்திட்டத்திற்கு உலக வங்கி கடன் உதவி வழங்கவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment