Thursday, September 30, 2010

கடவுச் சீட்டில் மாற்றம் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்தார்.

கடவுச் சீட்டில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு பிரதான கட்டுப்பாட்டாளர் டபிள்யூ. ஏ. சுலானந்த பெரேரா தெரிவித்தார்.
அதன்படி ஆ மற்றும் என்ற தொடரிலக்கங்கள் கொண்ட கடவுச் சீட்டுக்களைப் பயன் படுத்துபவர்கள் மீண்டும் புதிய கடவுச் சீட்டை பெற வேண்டும்.
அதற்கு விண்ணப்பிக்கும் வகையில் புதிய நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப் படுவதுடன் அதற்கென குடிவரவூ குடியகல்வு திணைக்களம் புதிய விண்ணப்பப் படிவமொன்றை அறிமுகம் செய்கிறது.
அக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய விண்ணப்பப் படிவம் நடை முறைக்கு வருகிறது என குடிவரவு குடியகல்வு
கட்டுப்பாட்டாளர் தெரிவித்தார்.
ஆமற்றும் தொடரிலக்கம் கொண்ட கடவுச் சீட்டை உடையவர்கள் இரண்டு புகைப்படங்கள் கடவுச் சீட்டின் பிரதி என்பவற்றுடன் ஒரு பக்கத்தையு டைய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கையளித்தால் மட்டும் போதுமானது.
சமாதான நீதவானின் சான்று படுத்தவோ அடையாள அட்டை பிறப்பு அத்தாட்சி பத்திரமோ இணைத்தல் அவசியமில்லை.
முதற் தடவையாக கடவுச் சீட்டொன்றை பெறவிரும்பும் ஒருவர் முன்பு போன்று கடவுச் சீட்டுக்கான முன்னைய விண்ணப்பப் படிவத்தை பூர்த்திசெய்வதுடன் அதற்குரிய சகல ஆவணங்களையும் இணைக்க வேண்டும். அத்துடன் சமாதான நீதவானின் சான்றுபடுத்தலும் அவசியமானது.

No comments:

Post a Comment