Saturday, September 26, 2009

உங்களால் முக்கனிகளும் விளைகின்றது


முடியாது எனும் கூற்றுக்கு----ஒரு
முற்றுப்புள்ளி வைத்துமுடியும் என்ற கூற்றுக்கு----இரு
முற்றுப்புள்ளி வைத்துமுன் இறங்கிய எங்கள் வீரனே
முற்பிறப்பில் என்ன பலன்----செய்தோம்
முரளிதரனே--உமை கருணை----கடலாய் பார்க்க

முயற்சிகள் ஆயிரம் ஆயிரம்
முன்னோக்கி வந்த போதும்
மூவினங்களும் புன்னகை தவழ
முடிந்தது கர்வம் நாடகம்
மூவேந்தரும் உங்களில்--சேர்ந்தனரோ

முக்கனிகள் இப்போது
முகம் சுழிக்காமல் விழைகிறது
முகம் காட்ட மறுத்தமுகில்கூட்டங்களும்
முகவரிதந்து போனது
முன்பில்லாத மழையும் பெய்தது

முதிர்வு உங்களுக்கு
முதிர் பருவத்திலும் வேண்டாம்
முக்கடவுளையும் என்னும்
மூச்சு உள்ளவரை நாங்கள்
மூன்று வேளையும்வணங்கி தொழுவோம்
முரளிதரா உங்களுக்காக..........................

No comments:

Post a Comment