Tuesday, September 29, 2009

வவுனியா-யாழ். பஸ் சேவை காலை வேளையில் ஆரம்பம்

வவுனியாவில் இருந்து 'ஏ9' வீதியூடாக குடாநாட்டுக்குத் தினமும் காலை 10.00 மணிக்கு பஸ் சேவைகளை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தச் சேவை இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் யாழ். அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். யாழ். குடாநாட்டை நோக்கி வவுனியா பஸ் தரிப்பிடத்திலிருந்து காலை 10.00 மணிக்கு தினமும் 10 பஸ்கள் புறப்படும் என்றும் அறிவித்துள்ளார். இது வரை, வவுனியாவிலிருந்து யாழ். குடாநாட்டை நோக்கி ஏ9 வீதியூடாக மாலை மூன்று மணிக்குப் பின்னர் வெவ்வேறு நேரங்களில் பஸ்கள் புறப்பட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment