இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் இலங்கை மீனவர்கள் 10 பேரையும் விரைவில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு தெரிவித்துள் ளது. இந்து சமுத்திர கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இலங்கை மீனவர்கள் 10 பேர் எல்லை மீறி இந்திய கடல் எல்லைக்குள் பிரவேசித்ததாகக் கூறி ஆந்திர பிரதேச கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பயணித்த இரண்டு இயந்திரப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களை விடுவிப்பதற்கான நடவடிக் கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இக்கைது தொடர்பாக அமைச்சர் ராஜித சேனாரட்ண, இந்தியாவிலுள்ள இலங்கை உயர் ஸ்தா னிகராலயத்துடன் பேச்சு நடத்தி, மீனவர் களை விரைவில் விடுவிப்பதற்கான முயற்சி களில் ஈடுபட்டிருப்பதாக அமைச்சின் ஊடகச் செயலாளர் தினகரனுக்குத் தெரிவித்தார். இந்திய சட்டமுறைகளுக்கு அமைய இம்மீனவர்கள் விடுதலை செய்யப்படு வார்கள் என இந்திய அதிகாரிகள் அமைச்சருக்குப் பதிலளித்திருப்பதாகவும் எனினும், இம்மீனவர்களை கூடிய விரைவில் விடுதலை செய்வதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியக் கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் இதுவரை கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப் பட்டிருந்த நிலையில், தற்பொழுது கைது செய்யப்பட்டிருக்கும் 10 மீனவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்களென்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை, இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது காணாமல் போன நான்கு மீன வர்களில் நான்காவது நபரின் சடலம் நாகப்பட்டிணம் பகுதியில் மீட்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளி யிட்டுள்ளன. நான்கு மீனவர்களில் ஒருவரின் சடலம் இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்பில் மீட்கப்பட்டிருந்த நிலையில் மேலும் இரண்டு சடலங்கள் தமிழகத்தின் தொண்டி பிரதேசத்தில் மீட்கப்பட்டதாகவும் அவ் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
Tuesday, April 19, 2011
ஆந்திர பிரதேச கடற்பரப்பில் 10 இலங்கை மீனவர் கைது..
இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் இலங்கை மீனவர்கள் 10 பேரையும் விரைவில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு தெரிவித்துள் ளது. இந்து சமுத்திர கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இலங்கை மீனவர்கள் 10 பேர் எல்லை மீறி இந்திய கடல் எல்லைக்குள் பிரவேசித்ததாகக் கூறி ஆந்திர பிரதேச கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பயணித்த இரண்டு இயந்திரப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களை விடுவிப்பதற்கான நடவடிக் கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இக்கைது தொடர்பாக அமைச்சர் ராஜித சேனாரட்ண, இந்தியாவிலுள்ள இலங்கை உயர் ஸ்தா னிகராலயத்துடன் பேச்சு நடத்தி, மீனவர் களை விரைவில் விடுவிப்பதற்கான முயற்சி களில் ஈடுபட்டிருப்பதாக அமைச்சின் ஊடகச் செயலாளர் தினகரனுக்குத் தெரிவித்தார். இந்திய சட்டமுறைகளுக்கு அமைய இம்மீனவர்கள் விடுதலை செய்யப்படு வார்கள் என இந்திய அதிகாரிகள் அமைச்சருக்குப் பதிலளித்திருப்பதாகவும் எனினும், இம்மீனவர்களை கூடிய விரைவில் விடுதலை செய்வதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியக் கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் இதுவரை கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப் பட்டிருந்த நிலையில், தற்பொழுது கைது செய்யப்பட்டிருக்கும் 10 மீனவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்களென்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை, இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது காணாமல் போன நான்கு மீன வர்களில் நான்காவது நபரின் சடலம் நாகப்பட்டிணம் பகுதியில் மீட்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளி யிட்டுள்ளன. நான்கு மீனவர்களில் ஒருவரின் சடலம் இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்பில் மீட்கப்பட்டிருந்த நிலையில் மேலும் இரண்டு சடலங்கள் தமிழகத்தின் தொண்டி பிரதேசத்தில் மீட்கப்பட்டதாகவும் அவ் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment