வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் 206 பேர் இன்று (01,04,11) வவுனியா நகர மண்டபத்தில் நடைபெறும் வைபவத்தில் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர உள்ளிட்ட பலர் இந்த வைபவத்தில் கலந்து கொள்வார்கள். சரண் அடைந்த போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு மீண்டும் சமூகத்துடன் இணைக்கும் அரசாங்கத்தின் செயல்திட்டத்தின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சி திட்டம் இடம்பெறுகின்றதென அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment