Thursday, April 7, 2011

கிழக்கில் தொடரும் உதயத்தின் உதவிப்பணி..............

கிழக்கில் ஏற்பட்ட பாரியவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கும் பணியினை சுவிஸ் உதயம் அமைப்பு ஆரம்பித்துள்ளது. இதன்படி அம்பாறை மாவட்டத்திற்கான உதவிவழங்கும் நிகழ்வு கடந்த 20ம் திகதி கல்முனையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 103 மாணவர்களுக்கு தலா 5000 ரூபா வைப்பிலப்பட்ட சேமிப்புப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும் இருதயநோயினால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாணவர்களில் ஒருவருக்கு 50,000 ரூபா பெறுமதியான இன்புஸா பம் வழங்கப் பட்டதுடன் மற்றைய மூவருக்கும் வைத்தியச்செலவுகளுக்கென தலா 50;000 ரூபா வைப்பிலிடப்பட்ட சேமிப்புப் புத்தகங்களும் வழங்கப்பட்டன. அம்பாறை மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதயத்தின் உதவித்தொகையும் வழங்கப்பட்டது.ஏப்ரல் 4ம் திகதி மட், வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற மற்றொரு நிகழ்வில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த 550 மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கப்பட்டது. அத்தோடு இப்பாடசாலையில் அமைக்கப்படவுள்ள கூடைப்பந்தாட்ட மைதானத்திற்கான செலவில் ஒருபகுதியை சுவிஸ் உதயம் அமைப்பு பொறுப்பேற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோன்ற பாரிய உதவிவழங்கும் நிகழ்வுகளில் ஒன்று எதிர்வரும் 8ம் திகதி மட் பெரியபோரதீவிலும் மற்றயது ஏப்ரல் நடுப்பகுதியில் திருகோணமலை மூதூர் தொகுதியிலும் இடம்பெறவுள்ளது.

No comments:

Post a Comment