Wednesday, April 13, 2011
தமிழ்-சிங்கள புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு ஊர்செல்ல கொழும்பில் பயணிகள் திரள் 3500 பஸ்கள் சேவையில்..
தமிழ்-சிங்கள புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு 3500 பயணிகள் பஸ்வண்டிகள் நேற்றுமுதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது. இத்திட்டத்தின் கீழ் இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 2500 பஸ்வண்டிகளும், 1000 தனியார் பஸ்வண்டிகளும் சேவையில் ஈடுபடுத்த ப்பட்டிருப்பதாகவும் அமைச்சுக் கூறியது. பண்டிகையை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு மக்கள் செல்வதற்காக வெளி இடங்களி லிருந்து கூடுதலான பயணிகள் பஸ் வண்டிகள் கொழும்புக்குத் தருவிக்கப் பட்டிருப்பதாக இ.போ.ச. தெரிவித்தது. தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச் செல்வதற்காக கொழும்பு புறக்கோட்டை பஸ் தரிப்பிடங்களில் பெருமளவான மக்கள் நேற்று முண்டியடித்ததைக் காணக் கூடியதாகவிருந்தது. இருப்பினும் மக்கள் எவ்வித கஷ்டமுமின்றி சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது. இதுஇவ்வாறிருக்க, பண்டிகை காலத்தையொட்டி இலங்கை புகையிரதத் திணைக்களம் நேற்று முதல் 17 ரயில்களை தூர இடங்களுக்கான மேலதிக சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. அவற்றின் பெட்டிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அத்தோடு குறுந்தூர ரயில் சேவையில் 70 புகையிரதங்கள் நேற்று முதல் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும், இச்சேவை 14ஆம் திகதிவரை தொடரும் என்றும் ரயில்வே திணைக்களம் கூறியது. இதேவேளை, போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம கொழு ம்பு புறக்கோட்டை ரயில் நிலையம் மற்றும் பிரதான பஸ் தரிப்பிடங்க ளுக்கு நேரில் சென்று பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டி ருக்கும் விசேட போக்குவரத்து ஏற் பாடுகளைக் கண்காணித்து, உரிய பணிப்புரைகளை வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment