Tuesday, April 5, 2011

மீள்குடியேறியோரின் வாழ்வாதார திட்டத்திற்கு ரூ. 1000 மில். ஒதுக்கீடு.

வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி முல்லைத்தீவு, மன்னார், வவுனியா பிரதேசங்களில் சுயதொழில் கடன்.



யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சுய தொழில் கடன் வழங்கும் திட்டத்திற்கு அரசாங்கத்தினால் 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவர் ஜி.ஏ. சமரசிங்க தெரிவித்தார். வட மாகாணத்தில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட 10,000 குடும்பங்களுக்கே சுய தொழில் முயற்சிகளுக்காக கடன் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவர், வட மாகாணத்தில் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அரசாங்கம் இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் இலகு கடன் வசதிகளை அறிமுகம் செய்வதன் மூலம் தமது வாழ்க்கையை பழைய நிலைக்கு கொண்டு செல்ல முடியும். மக்களுக்கு தேவையான சகல வசதி களையும் செய்து கொடுப்பதன் மூலம் அவர்களின் வாழ்வா தாரம் மட்டுமன்றி சமூக நல்லிணக்கத்தையும், சமாதான மான, நாட்டை கட்டியெழுப்ப முடியும். இதற்காகவே ஜனாதிபதி அவர்கள் மீள் குடி யேறிய மக்களுக்கு புனர்வாழ்வு அதிகார சபை ஊடாக 4 வீத வருட வட்டியில் 10 வருட தவணைக் காலத்தில் செலுத்தி முடிக்கும் வகையில் கடன் திட்டத்தினை அறிமுகப்படுத்தி யுள்ளது. இக்காலப்பகுதியில் அவர்களுக்கு ஒரு வருடகாலம் சலுகைக் காலமும் வழங்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். இக்கடன் தொகையானது ஆகக்கூடிய இரண்டரை இலட்சமும் குறைந்த பட்சம் 50,000 ரூபாவாகும். கடன்களுக்காக விண்ணப்பிப்பவர்கள் பிரதேசத்தில் காணப்படும் வளங் களைப் பயன்படுத்தி நெல் உற்பத்தி, சிறு வியாபாரம் தையல், விவசாயம் போன்ற உற்பத்திகளுக்கு கடன் வழங்கப்பட உள்ளது. இவ் வேலைத்திட்டமானது 4 வருட கால எல்லையைக் கொண்டது. இக்காலப் பகுதியில் வடமாகாணத்திலுள்ள சகலரும் பொருளாதார நீதியாகவும், சமூக ரீதியாக வும் எழுச்சி பெற முடியும். இதேவேளை, கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் இக்காலப்பகுதி வரை 150 க்கும் மேற்பட்டவர்கள் இச் சலுகையை பெற்றுக் கொண்டதுடன் இரண்டாயிரத் திற்கும் மேற்பட்டவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற்றுள்ளது. மிக விரைவில் அவர்களுக்கான உதவித் தொகை வழங்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment