Wednesday, October 14, 2009

ஏறாவூர் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி மருந்தால் 93 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி.

மட்டக்களப்பு ஏறாவூர் மாக்கார் மாக்கார் மகாவித்தியாலயத்தில் இன்று காலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி மருந்து ஒவ்வாமையால் 93 மாண, மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 93 மாணவர்களில் 8 மாணவர்கள் மட்டக்களப்பு போதான வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளனர். இச் சம்பவத்தை தொடர்ந்து அப் பாடசாலை மாணவர்களிடையே அச்சம் நிலவுவதாக தெரியவருகிறது. மேலும் இப் பிரதேச பாடசாலைகளுக்கு தடுப்பூசி வழங்கப்படுவது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment