Tuesday, October 13, 2009

கருணை மனசுக்கு சொந்தகாரன் எங்கள் கருணா அம்மான்


கருணைக்கு கையளவு மனசு
கருணா அம்மானுக்கு
கடல் அளவு மனசு!!
கள்ளமில்லா வெள்ளை மனசு
காவியங்களை உருவாக்கிய மனசு!!
கறைகள் என்று உணர்ந்து
கரங்களை கழுவிய மனசு!!
கனிகளின் சுவை போல்
கனிந்து உருக வைக்கும் மனசு!!
கர்வம் என்றுமே இல்லாத
கலகலப்பான மனசு!!
கர்ணன் போல் கொடை வள்ளல்
கரங்கள் தாங்கிய மனசு!!
கடமைகள் வீர சிந்தை சுமந்து
கரிசனம் காட்டும் சுத்த மனசு!!
கட்டுடா கச்சை தனை என்று
கண்ணில் பட்ட பகைதனை
கண்ணிமைக்குமுன் வீழ்த்திய மனசு!!
கர்மவீரனின் திறன் கொண்டு
காரியங்கள் பலமுடித்த
கண்ணியவாளனின் கருணை மனசு!!
கருணா அம்மானுக்கு என்றும்
கருணை நல்ல மனசு!!

No comments:

Post a Comment