Saturday, October 31, 2009
மட்டக்களப்பு போதான வைத்தியசாலைக்கு 20 சிற்றூழியர்கள், அமைச்சர் கருணா அம்மான் வேண்டுதலின் பேரில் நியமனம் .......
தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சரும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித் தலைவருமாகிய விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்களின் வேண்டுதலின் பேரில் 20 பேருக்கு மட்டக்களப்பு போதான வைத்தியசாலையின் சிற்றூழியருக்கான நியமனம் சுகாதார அமைச்சால் அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. எல்லா வகையிலும் அபிவிருத்தி அடைந்து வரும் மட்டு. போதான வைத்தியசாலையில் சிற்றூழியர்களுக்கான பற்றாக்குறை நிலவிவந்தது. அதை நிவர்த்தி செய்யுமுகமாக அமைச்சர் முரளிதரனின் கவனத்திற்கு கொண்டு வந்த போது இது தொடர்பாக சுகாதார அமைச்சரோடு கலந்துரையாடி முதற்கட்டமா 20 பேர் சிற்றூழியர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டது. இது போன்று எல்லாத் துறைகளிலுமுள்ள வெற்றிடங்கள் படிப்படியாக நிறப்பப்பட்டு வேலையில்லா பிரச்சனை கிழக்கு மாகாணத்தில் தீர்க்கப்படுமென அமைச்சர் வி. முரளிதரன் தெரிவித்துள்ளதாக இத் தகவலை தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சின் ஊட செயலாளர் யூலியன் அவர்கள் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment