Thursday, October 15, 2009

கிழக்குவாழ் என் உயிரிலும் மேலான மக்களே மீண்டும் ஓர் பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகுங்கள்.(கருணா அம்மான்)

என் அன்பிலும் மேலான எம் உறவுகளே கடந்த காலங்களில் நாம் பெற்ற துன்பங்களையும், இன்பங்களையும் உங்களோடு சேர்ந்து உங்களோடு நின்று உணர்ந்தவன், அறிந்தவன் என்ற ரீதியில் என்றும் உங்களோடு இருக்க விரும்புகின்றேன். எமது இலங்கை திருநாட்டில் கடந்த கால கொடுமையான யுத்தத்தின் மூலம் எமது மக்களின் அரசியல் விடுதலைப் பயணத்தில் இணைத்துக்கொண்டவன். இது எனக்காக அல்ல என்னையும், எம் மண்னையும் நேசிக்கும் மக்களாகிய உங்களுக்காக. இலங்கையின் சோசலிச ஜனநாயக குடியரசின் அதி உத்ம ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினுடைய கரங்களைப் பல தேர்தல் மூலம் பலப்படுத்திய உங்களுக்கு எனது இதயம் கனிந்த நன்றிகள் என்றும் இருக்கும். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் இலங்கையின் 11வது பாராளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டிய காலத்தின் தேவையில் கால்பதித்தவர்களாக நாம் நின்று கொண்டு இருக்கின்றோம். எனவே எம் மக்களுக்கு கடந்த அரசியல்வாதிகள் போல் என்றுமில்லாதவாறு மக்களோடு நின்று சேவையாற்றக்கூடிய சிறந்த அரசியல் தலைவர்களை நான் உங்கள் முன் கொண்டு வருவேன். நீங்கள் அவர்களை ஆதரவளிப்பதன் மூலம் உங்களை நீங்கள் வளப்படுத்தி எதிர்கால எம் அரசியல் பயணத்தில் எம்மோடு இணைந்து கடந்த கால இழப்பை ஈடுசெய்ய உங்கள் அனைவரையும் அன்பாக கேட்டுக்கொள்கின்றேன்.தேசிய நல்லிணக்க மறுசிரமைப்பு அமைச்சரும்,சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவர். விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்)

No comments:

Post a Comment