Friday, November 6, 2009

உத்தம புத்திரனுக்கு இன்று பிறந்தநாள் வையகம் உங்கள் புகழ் வாழீ


நம் நாட்டில் தோன்றிய
பொன்மனச் செல்வனே
ஆயிரத்தில் ஒருவனாக
அடிமை விலங்கை உடைத்தவன்
அமைதி மைதானம் வேண்டி
மெல்ல திறந்தது உன் மனக்கதவு
அலைகள் ஓயாமல் அடித்ததினால்
பயணங்கள் முடியாது என்று
கடவுளுக்கோர் கடிதம் அனுப்பினர் மக்கள்
அவன்தான் மனிதனாக
ஆண்டவன் கட்டளையுடன்
அக்னிநட்சத்திரமாய்
தசாவதாரம் போல் ஓர் அவதாரமாய்
கலியுக கண்ணனாக--இன்று
நினைத்ததை முடிப்பவனாக--என்றும்
இலங்கை நாட்டு தங்கமாய்
தனிக்காட்டு ராஐவிடமிருந்து தப்பி வந்த
தங்கமகனாய் நீங்கள் மக்களை
உல்லாச பறவைகளாய் பறக்கவைத்தீர்கள்
உயர்ந்த உள்ளம் படைத்த எங்கள்
உத்தமபுத்திரனாய் வலம்வரும் நாயகனே
நல்லவனுக்கு நல்லவன் என்று
நெஞ்சிருக்கும் வரை நாம் உரைப்போம்
நெஞ்சிலோர் ஆலயம் கட்டி
நிறம்மாறாத மலர்கள் போல்
நினல்போல் உங்கள் பின்னே தொடர்வோம்
கவரிமான் இனத்திற்கு உரியவனே
பாலும் பழமும் நம் தருவோம்
பகலிலும் நிலவாய் எறித்து நிற்பாய்
மக்கள் உன்பக்கம் என்றும் ஐயா
சங்கு முழங்கி உனை நாம் என்றும் வாழ்த்துவோம்
பல்லாண்டு நீங்கள் வாழியவே... வாழீயவே

கிழக்குமகள் இணையதளம்



No comments:

Post a Comment