Sunday, November 8, 2009

கருணா அம்மானின் பிறந்தநாளையொட்டி மட்டக்களப்பு சிறுவர் இல்லங்களில் பிறந்தநாள் கொண்டாட்டம் !

நேற்று மட்டக்களப்பிலுள்ள சிறுவர் இல்லங்களில் மிக விமர்சையாக தேசிய நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்களின் 43வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அமைச்சர் கருணா அம்மான் அவர்களின் மக்கள் தொடர்பாளர் ரஞ்சன் மற்றும் ஊடக செயலாளர் யூலியன் ஆகியோரினால் ஒழுங்கு செய்யப்பட்ட பிறந்தநாள் விழா வைபவங்கள் மட்டக்களப்பிலுள்ள கண்பார்வையற்ற சிறுவர்கள் தங்கியுள்ள கல்லடி தரிசனத்திலும் வசதி குறைந்த மாணவர்கள் தங்கி கல்வி பயிலும் E.D.S விடுதியிலும் பெற்றோறை இழந்த ஜீவயோதி இல்லத்திலும் சிறுவர்கள் மத்தியில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் கொண்டாடப்பட்டது. இவ் இல்லங்களில் அமைச்சர் கருணா அம்மானின் ஏற்பாட்டில் மதிய போசன விருந்து வழங்கப்பட்டு இனிப்பு பண்டங்களும் வழங்கப்பட்டது. அதே போன்று மட்டு நகரிலுள்ள ஆட்டோ சாரதிகள் பொலீஸ் பாதுகாப்பு படையினர் மற்றும் பொது மக்கள் என எல்லோருக்கும் இனிப்பு பண்டங்கள் வழங்கப்பட்டு கருணா அம்மானின் பிறந்த நாள் மட்டு நகரில் கொண்டாடப்பட்டது.


No comments:

Post a Comment