Monday, November 9, 2009
இடம்பெயர்ந்த சிறுவர்களுக்குப் புத்தகங்கள் அன்பளிப்பு
போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயரந்து வவுனியா சிறுவர் இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வரும் சிறுவர்களுக்கு முன்னாள் பொலிஸ் மா அதிபர்களின் துணைவியர் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். முன்னாள் பொலிஸ் அதிபார்களின் துணைவியராகிய திருமதி பத்மினி இராஜகுரு, திருமதி சாந்தினி பெர்னாண்டோ, ஆகியோருடன் வவுனியா சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லியூகேயின் துணைவியாராகியா திருமதி துஷாந்தி லியூகேயும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டார். வவுனியா வைரவபுளியங்குளத்தில் உள்ள சிறிலிய செவன சிறுவர் இல்லத்தில் நடைபெற்ற இந்த அன்பளிப்பு வழங்கும் வைபவத்தில் வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வரும் சிறுவர்களுக்கும், சிறிலிய செவன இல்லத்தைச் சே்ந்த சிறுவர்களுக்குமே இவ்வாறு அன்பளிப்பாக புத்தகங்கள் வழங்கப்பட்டன. கொழும்பு கிழக்கு லயன்ஸ் கழகத்தினரால் இந்த அன்பளிப்புக்கான புத்தகங்கள் வழங்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment