Monday, November 16, 2009

மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாத் பதியுதீன் சென்ற வாகனம் விபத்திற்குள்ளானதில் அமைச்சர் காயமடைந்துள்ளார்.

மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாத் பதியுதீன் சென்று கொண்டிருந்த வாகனம் விபத்திற்குள்ளானதில் அமைச்சர் காயமடைந்துள்ளார். மனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற இவ் விபத்தின்போது வாகனம் பலத்த சேதமடைந்துள்ளபோதும் அமைச்சர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. வீதியின் குறுக்கே பாய்ந்த சிறுவனை தவிர்ப்பதற்கு சாரதி முயற்சி மேற்கொண்டபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்துள்ள வாகன சாரதி மற்றும் மெய்பாதுகாவலர்கள் அனைவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment