Sunday, November 29, 2009

சிந்தியுங்கள் கிழக்கு மக்களே...........

கிழக்கு மக்களே நீங்கள் அன்று போரினால் இடம் பெயர்ந்து அகதியாக
நின்ற போது உங்களை பார்க்க வராதவர்கள் குரல் கொடுக்கதவர்கள் இன்று
எந்த முகத்துடன் உங்களை நாடி வருகின்றார்கள் இவர்களுக்கு வெட்கம்
இல்லையா இன்று கிழக்கு மக்கள் நிம்மதியுடனும் வளமுடனும் வாழ்ந்து
வருகின்றார்கள் இதனை சின்னா பின்னமாக்கு வதற்காகவா இவர்கள்
வருகின்றார்கள் கிழக்கு வாழ் மக்களே இவர்களை நம்பி காலா காலம்
முட்டாளாக வாழ்ந்தது போதும் இனியும் முட்டாள்களாக வாழாமல்
சிந்தித்து முடிவு எடுங்கள்......................

இவர்களின் விஜயம் கீழே பதிவு செய்யப்பட்டுள்ளது..



தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பு விஜயம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் டெலோ பாராளுமன்ற உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பிற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்..
அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகதாரலிங்கம் , செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரே மட்டக்களப்பிற்கு விஜயம் செய்திருந்தனர்..
இவர்களுடன் கிழக்கு மாகாணத்தில் நிலவிய அரசியல் நெருக்கடி மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக கடந்த 3 வருடங்களாக கொழும்பில் தங்கியிருந்த அக் கட்சியின் பொதுச் செயலாளரான பிரசன்னா இந்திரகுமாரும் தற்போது மட்டக்களப்பு திரும்பியுள்ளார்..
தமது கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து கட்சி உறுப்பினர்களுடன் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைகளை மேற்கொண்டனர்..
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரமுகர்களையும் சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வேட்பாளரொருவரை நிறுத்துவது தொடர்பாகவும் கருத்துக்களை பரிமாறியதாகவும் தெரியவருகின்றது. .
தற்போது மட்டக்களப்பில் தங்கியுள்ள மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான தங்கேஸ்வரி கதிர்காமர் மற்றும் பா.அரியநேத்திரன் ஆகியோரையும் சந்தித்து உரையாடிய பின்பு அன்றிரவே கொழும்பு திரும்பினர்.

No comments:

Post a Comment