Wednesday, March 24, 2010

வடக்கில் பாடசாலைகளை நிர்மாணிக்க ரூபா 100 மில்லியன்

வடக்கில் பாடசாலைக் கட்டடங்களை நிர்மாணிக்க அரசாங்கம் 100 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்தார். 'வடக்கின் வசந்தம்' திட்டத்தின் கீழ், இதுவரை 23 பாடசாலைகள் கட்டி முடிக்கப்பட்டு, கல்வி நடவடிக்கைகளுக்காகத் திறந்துவைக்கப்பட்டுள்ளன. மேலும், மூன்று பாடசாலைகள் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளன.
வடக்குப் பகுதி மாணவர்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு மேலும் 250 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது இந்த திட்டம் இன்னும் மூன்று வாரங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment