Monday, March 1, 2010

விருப்பு வாக்கு இலக்கங்களை தெரிவுசெய்யும் பணிகள் தீவிரம்.....

வேட்பாளர்களுக்கான விருப்பு வாக்கு இலக்கங்களை கூடிய விரைவில் மாவட்ட அடிப்படையில் தேர்தல்கள் செயலகத்தினூடாக அனுப்பி வைக்க துரித நடவடிக்கை எடுத்து வருவதாக தேர்தல்கள் செயலக உயரதிகாரி ஒருவர் தெரிவித்ததாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்க ஒதுக்கீடு தொடர்பான பணிகளில் தேர்தல்கள் செயலகம் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
வேட்பாளர்களின் விருப்பு இலக்க ஒதுக்கீடு இன்று உத்தியோக பூர்வமாக அனுப்பி வைக்கப்படுமென்று தகவல்கள் வெளியாகியிருந்த போதும் அது தொடர்பான பணிகள் பூர்த்தியாகவில்லை எனவும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment