Thursday, March 11, 2010

அரசியல் கட்சிப் பிரமுகர்களுடன் தேர்தல் ஆணையர் நாயகம் சந்திப்பு வாக்கு எண்ணுவதை கண்காணிக்க வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்...........

எதிர் வரும் ஏப்ரல் 08 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தல் தொடர்பான விஷேட கலந்துரையாடல் ஒன்றை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் அரசியல் கட்சிப் பிரமுகர்களுடன் நடத்தவுள்ளார்.
அதற்கமைய தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திஸாநாயக்க நாளை வெள்ளிகிழமை அரசியல் கட்சிகளின் செயலாளர்களை சந்தித்து உரையாடவுள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான விடயங்களுடன் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை அனுமதிப்பது அரசியல் கட்சிகளின் தேர்தல் வன்முறைகள் ஆகியவை பற்றி இந்த சந்திப்பின் போது பேசப்படும் என்று தேர்தல் திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment