Thursday, March 18, 2010

மன்னார் சமாதானப் பாலத்தை இன்று ஜனாதிபதி திறந்துவைத்தார்.....

மன்னார் மாவட்டத்தின் பெருநிலப்பரப்பையும் மன்னார் தீவையும் இணைக்கும் வகையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய பாலத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று காலை 10.30 மணியளவில் வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார். இந்நிகழ்வில்அமைச்சர் றிஷாட் பதியுதீன் மன்னார் அரச அதிபர் நீக்கிலாப்பிள்ளை மற்றும் அரச உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 2007 இல் ஜப்பான் அரசு வழங்கிய நிதியில் 'மன்னார் சமாதான பாலம்' என்ற பெயரில் 137 கோடி ருபா ஒதுக்கப்பட்டுக் கைச்சாத்திடப்பட்டது.
உள்நாட்டு வெளிநாட்டுத் தொழில்நுட்பவியலாளர்கள் இப்பாலத்தை நிர்மாணித்தனர். இரண்டரை வருடங்களுக்கு மேல் பால நிர்மாண வேலைகள் இடம்பெற்று வந்தன. அதி நவீன முறையில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இப்பிரதேச மக்களின் போக்குவரத்து நடவடிக்கைகள் இலகுபடுத்தப்படுவதோடு அவர்களது பொருளாதார வளங்களும் மேம்பாடடமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment