Thursday, March 25, 2010

ஆயிரம் ரூபாவாக சமுர்த்திக் கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானம் அமைச்சர் லஷ்மன் யாப்பா தெரிவிப்பு.

அரசாங்கம் சமுர்த்தி கொடுப்பனவை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளது. அதன்படி ஆகக் குறைந்த கொடுப்பனவுத்தொகை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது என்று தகவற்றுறை அமைச்சர் லஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதிக்குப் பின் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் சமுர்த்தி அதிகார சபையின் ஊழியர்கள் 23700 பேருக்கு ஓய்வுதியம் வழங்கும் திட்டத்தையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார். மனிதாபிமான செயற்பாடுகளின் முடிவில் சேமிக்கப்பட்ட நிதியின் மூலமே இவ்வாறான நலன்புரி நடவடிக்கைகளுக்கான வாய்ப்பு கிடைத்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
16 இலட்சம் பேர் சமுர்த்தி வறுமை ஒழிப்பு நிவாரண உதவியை பெற்று வருகின்றனர். மஹிந்த சிந்தனை கொள்கைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வரப்பிரசாதங்களுககு ஏற்ப சமுர்த்தி அதிகார சபை அவர்களுக்கு இலகு கடன் சுய வேலை வாய்ப்பு மற்றும் சிறு முதலீட்டு திட்டங்களுக்கும் உதவி வருகிறது. என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment