Tuesday, March 30, 2010

தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தேசிய கல்வியியல் கல்லூரிக்கு விஜயம்.

தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான் ) தாழங்குடாவில் அமைந்துள்ள தேசிய கல்வியியல் கல்லூரிக்கு விஜயம் செய்தார். அங்கு சென்ற அவர் தேசிய கல்வியியல் கல்லூரி பீடாதிபதி திரு.எஸ். பாக்கியராஜா உள்ளிட்ட பல விரிவுரையாளர் கொண்ட குழுவினை அமைச்சர் சந்தித்தார்.அதில் தேசிய கல்வியியல் கல்லூரி தொடர்பான விடங்கள் ஆராயப்பட்டது. இதன்போது தேசிய கல்வியியல் கல்லூரியின் குறைபாடுகள் கேட்டறிந்த அமைச்சர் இதனை நிறைவு செய்து தருவதாக வாக்குறுதியளித்தார். தொடர்ந்து இசை, நடனம் போன்ற பாடங்களை நடாத்த நடவடிக்கை மேற்கொண்டதுடன் மாணவர்களுக்கு தற்காலிக வகுப்பறை ஒன்றினை ஏற்படுத்தித் தருவதாகவும் வாக்குறுதியளித்தார்.

No comments:

Post a Comment