Thursday, March 25, 2010

கருணாஅம்மான் கல்குடா விஜயம் மக்களுடன் கலந்துரையாடல்.

தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) கல்குடா பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.இங்கு உள்ள மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்ததுடன் மீன்பிடி தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டார்.மட்டக்களப்புக்குப் பொறுப்பான மீன்பிடிவள திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்தார். அத்துடன் ஆலயங்கள், பாதைகள் என்பவற்றையும் பார்வையிட்டார்.மேலும் அவர் கொங்கிரீட் பாதை ஒன்றையும் கல்மடு பிரதேசத்திற்கு பெற்றுக்கொடுத்தார்.

No comments:

Post a Comment