Thursday, December 9, 2010

மாணவர்களுக்கு 2011 ஆம் ஆண்டிற்கான இலவச பாடநூல் வழங்கும் தேசிய வைபவம்.

அரசாங்க பாடசாலைகளில் கல்வி கற்கும் சுமார் 41 இலட்சம் மாணவர்களுக்கு 2011 ஆம் ஆண்டிற்கான இலவச பாடநூல் வழங்கும் தேசிய வைபவம் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவின் தலைமையில் திருகோணமலை உவர்மலை விவேகா னந்த மகா வித்தியாலயத்தில் நேற்று (08) இடம்பெற்றது. அதன் போது கல்வி அமைச்சர் பார்வை இழந்த கல்வி கற்பதில் திறமைமிக்க மாணவர் ஒருவருக்கு பாடநூல்களை வழங்கினார். இம்முறை உயர் தரப் பரீட்சையில் கிழக்கு மாகாணத்திலே முதலாம் இடம்பெற்ற மூன்று மாணவர்களும் ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment