மட்டக்களப்புக்கு இன்று சனிக்கிழமை காலை விஜயம் செய்த உலக வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி நகோஸி ஒகொன்ஜோ பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் தமது நிதியுதவியில் செயற்பட்டவரும் தமது நிதழி உதவியிலான மீள் எழுச்சித்திட்டக் கண்காட்சியை ஆரம்பித்துவைத்து திட்டத்தின் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்தார்.
இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டு ஜனாதிபதியை நேற்றுச் சந்தித்து உரையாடிய அவர், இன்று மட்டக்களப்பில் தமது செயற்திட்டம் செயற்படுத்தப்பட்டு வரும் திராமடுக் கிராமத்தில் நடைபெற்ற கண்காட்சியில் கலந்து கொணடார்.
இதன் போது நடைபெற்ற கலந்துரையாடலில், திராய்மடு மக்களிடம் அவர்களின் குறைகள், தேவைகள் குறித்துக் கேட்டறிந்து கொண்டார்.
இதன் போது, உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment