Wednesday, December 29, 2010

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பரிசளிப்பு விழா மட்டக்களப்பில்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தினால் 2010 ஆம் ஆண்டுக்கான மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் பரிசளிப்பு விழா நேற்று மாலை மட்டக்களப்பு கல்லடி நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.ஜே.கபூர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பிரசாந்தன், இரா.துரைரத்தினம், இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணசபைப் பணிப்பாளர் கே.தவராஜா பலர் கலந்துகொண்டனர்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தினால் 2010 ஆம் அண்டுக்கான மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் நடாத்தப்பட்ட பல்வேறு போட்டிகளிலும் வெற்றியீட்டிய இளைஞர் யுவதிகளுக்கு இதன்போது பரிசில்கள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment