Sunday, December 26, 2010

நாடு முழுவதும் விசேட பஸ் சேவை.

நத்தார் மற்றும் புதுவருடத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் விசேட பஸ் சேவைகள் வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் உப தலைவா; எல். ஏ. விமலரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளா; சந்திப்பில் தகவல் வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் தகவல் தருகையில்
பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் விசேட பஸ் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக கிரிஸ்தவ மக்கள் அதிகமாக வாழக்கூடிய பிரதேசங்களுக்கு மாத்திரம் 1800 பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
வீதி விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் 2000 பேர் மரணமடைகின்றனர். இவ்வாறான விபத்துக்களைத் தடுக்கவூம் விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment